Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பிழைப்புவாதம்’

இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம்

 

இந்தியாவில் ஏன் இன்னும் கம்யூனிச இயக்கம் வளர வில்லை என்று பொறுப்புணர்வோடும், அல்லது விரக்தியோடும் கேட்பவர்களுக்கு ஒரு வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்தும் விதமாக “இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம்” எனும் இச்சிறு வெளியீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் முதல் பதிப்பு வாசகர்களிடமும், ஊக்கமுள்ள அரசியல் அணிகளிடமும் பரவலாக வரவேற்பையும், ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் தூண்டியுள்ளது.கால அவசியம் கருதி மறுபதிப்பு செய்து மீண்டும் வெளியிடுகிறோம்.
இந்தியக் கம்யூனிச இயக்க வரலாறானது,
தலைமையின் துரோகமும் அணிகளின் புரட்சிகரத் தியாகமும் நிறைந்தது.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரசின் துரோகத் தலைமையை எப்போதுமே தட்டிக் கேட்கவில்லை; தேசிய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை ஏற்கவும் துணியவில்லை.போலி சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் உள்ள முற்போக்காளர்களைப் பலப்படுத்துவது என்ற பெயரில் காங்கிரசின் வாலாக கம்யூனிஸ்டுக் கட்சி சீரழிந்தது.
தெலுங்கானா புரட்சி இயக்கத்துக்குத் துரோகமிழைத்து, காட்டிக் கொடுத்து அதற்கு முடிவு கட்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத் தலைமை.
நக்சல்பாரி விவசாயிகள் இயக்கம் ஆயுதந் தாங்கிய எழுச்சியாக வெடித்த்க் கிளம்பிய போது, அதை நசுக்குவதற்குப் போலீசை அனுப்பியது, மேற்கு வங்க ‘இடதுசாரி’ கூட்டணி அரசு.
..

இரண்டு போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் துரோகத்தனமான கொள்கைகளால் வழி நடத்தப்பட்டு, அவசரநிலை பாசிச ஆட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தன.
இந்த நூல் தொகுத்துக் கூறும் கால எல்லைகளைக் கடந்து வலது, இடது(மார்க்சிஸ்டு) போலிக் கம்யூனிஸ்டுகள் திரிந்து, திசைவிலகித் திரியும் சமகால விசயங்களையும் வாசகர்கள் இணைத்துப் பார்க்கும் போது இந்நூலை இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர முடியும்.
மார்க்சியத்தை அறிந்து கொள்வதிலும் துணிந்து செல்வதிலும் மாறாத விருப்பம் கொண்டு, சாவைப் பழித்த மாவீரன் பகத்சிங் நினைவுகளை….இச்சிறுவெளியீட்டின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்களால் சிறப்பியுங்கள்.
பதிப்பகத்தார்.
..
இச்சிறு நூல் 19.8.1983-இல் பம்பாயிலிருந்து வெளிவந்த “டைம்ஸ் வீக்லி” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஏ.கெட்கர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். அடைப்புக் குறிக்குள் உள்ள சேர்க்கைகள் எம்முடையவை.
மொழியாக்கம்: புதிய ஜனநாயகம் இதழ்

இந்நூல் சென்னை புத்தகக் காட்சி கீழைக்காற்று

அரங்கில் கிடைக்கும்.

பகத்சிங் நினைவுநாள் வெளியீடு
வெளியீடு & கிடைக்குமிடம்
————————————-
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2
.
044- 28412367
தொடர்புடையப் பதிவுகள்
..
கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)
..
நக்சல்பாரி… நந்திக்கிராமம்…சி.பி.எம்.கட்சியின் கொலைவெறி
புத்தகப் பிரியன்

 

 

 

Read Full Post »

கட்சியா கந்து வட்டி கும்பலா ?

சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு  சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே “என்ன செய்வது தோழர்” என்றும் நொந்து கொண்டார்.

“இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது……

 “முட்டாள் தனமா வந்துட்டோம்! புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவோம்!!”

என்பதுதான்.

இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் ‘பெரிய புத்திசாலிகள்’தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் ‘பொலிட்பீரோ’ என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!

 ஏகலைவன்

Read Full Post »