Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘முல்லைப் பெரியாறு’ Category

IndiaTv12065b_VIJAYAN

ஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது “ஊழலுக்கு உடந்தையாக இரு! இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்!” என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.

கேரள முதல்வரும், கேரள மாநில சி.பி.எம். கட்சி நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) விலிருந்து நீக்கியதன் மூலம் இப்புதிய கொள்கையைச் செயல்படுத்தவும் கிளம்பி விட்டது.

கேரளத்தில் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியும், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியும் பதவிக்காகவு ம், சி.பி.எம் கட்சியின் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்துக்காகவும் தீராத நாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பினாரயி விஜயன் மீதான லாவலின் ஊழல் விவகாரம் வீதிக்கு வந்து நாறத் தொடங்கியதும், இந்த கோஷ்டி மோதல் உக்கிரமடைந்தது.

அதென்ன லாவலின் ஊழல்? கேரளாவில் 1996 முதல் 2001 வரை சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான “இடது முன்னணி’ ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களைச் சீரமைத்து நவீனப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போட்டார். இதில் ரூ. 390 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரசு கட்சியினர் குற்றம் சாட்டினர். 2001 முதல் 2006 வரையிலான காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய காங்கிரசு முதல்வரான உம்மன் சாண்டி, இந்த ஊழலை மையப் புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) விசாரிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தார். மிகத் தாமதமாக மையப் புலனாய்வுத்துறை இப்போதுதான் பினாரயி விஜயன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால், இப்போது காங்கிரசு கூட்டணிக்குப் பதிலாக, இடது முன்னணி ஆட்சியில் உள்ளது. (பார்க்க: பதிய ஜனநாயகம், மார்ச் 2009).

காங்கிரசு மற்றும் மையப் புலனாய்வுத்துறையின் குற்றச் சாட்டுகளுக்கு பினாரயி விஜயனோ, சி.பி.எம். தலைமையோ இன்றுவரை விளக்கமளிக்கவில்லை. “தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் மையப் புலனாய்வுத் துறை” என்று சாடும் சி.பி.எம். கட்சித் தலைமை, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கமுடைய அவதூறுகள் என்று எதிர்வாதம் செய்கிறது.

ஆனால், கேரள மாநில அரசின் கணக்கு தணிக்கைத் துறை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 390 கோடி நட்டமேற்பட்டுள்ளதாக தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநில அரசின் ஊழல் தடுப்பு கண் காணிப்புத் துறை, எட்டு உயரதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவரங்களைக் கொண்ட அறிக்கையை அச்சுதானந்தன் கட்சித் தலைமையிடம் கொடுத்து பினாரயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். ஆனாலும் கட்சி மட்டத்தில் கூட விசாரணை நடத்த சி.பி.எம். தலைமை முன்வரவில்லை. காங்கிரசும் மையப் புலனாய்வுத் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு செய்கின்றன என்றால், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான அச்சுதானந்தன், பினாரயி விஜயன் மீது புகார் கொடுத்திருப்பதும் கூட வெறும் அவதூறுதானா என்று சி.பி.எம். கட்சிக்குள்ளேயே கேள்வி எழும்பத் தொடங்கிய பின்னரும் கட்சித் தலைமை இது பற்றி விசாரணை நடத்த முன்வரவில்லை.
pinarayi-achuthanandan-new-313

மாறாக, கடந்த பிப்ரவரியில் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தைக் கூட்டிய கட்சித் தலைமை, பினாரயி விஜயனை ஆதரித்து, கட்சியைக் காப்பாற்ற சமரசமாகப் போகுமாறு அச்சுதானந்தன் கோஷ்டியை எச்சரித்தது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பினாரயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் கேரள மாநில சி.பி.எம். செயலாளர் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று கட்சித் தலைமை அறிவித்தது. இதன்படி, பினாரயி விஜயன் மீது மையப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க அனுமதி தரக்கூடாது என்று கேரள மாநில ஆளுநருக்கு “இடதுமுன்னணி’ அமைச்சரவை பரிந்துரை செய்தது.

ஆனால் ஆளுநரோ, அமைச்சரவையின் பரிந்துரையையும் மீறி பினாரயி விஜயன் உள்ளிட்டு இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மையப் புலனாய்வுத் துறைக்கு அனுமதியளித்தார். இதைத்தான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஆளுநர் காங்கிரசு கட்சிக்காரர் போலச் செயல்படுகிறார் என்றும் சி.பி.எம் கட்சித் தலைமை சாடுகிறது. அமைச்சரவையின் பரிந்துரையை மீறி ஆளுநர் இப்படி அனுமதி வழங்க அதிகாரம் கிடையாது என்று சட்டவாதம் பேசுகிறதே தவிர, எவ்வித ஊழலிலும் ஈடுபடவில்லை என்று அக்கட்சி நியாயவாதம் பேசவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் ஆளுநர் அனுமதியளித்ததும், கேரளாவிலும் தமிழகத்திலும் சி.பி.எம். கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனால், கேரள முதல்வர் அச்சதானந்தனோ ஆளுநரின் செயலை நியாயப்படுத்திப் பேசினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சியான காங்கிரசு, லாவலின் ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி போலி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. மறுபுறம், அச்சு கோஷ்டி பினாரயி விஜயனின் ஊழலை அம்பலப்படுத்தி வந்ததோடு, தேர்தலின்போது உள்குத்து வேலையிலும் இறங்கியது. ஏற்கெனவே மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகச் செயல்படுத்தி மக்கள் நலத்திட்டங்களைப் புறக்கணித்து வந்ததால், “இடது முன்ணனி’ ஆட்சியின் மீது கேரள மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர். இதோடு லாவலின் ஊழல் விவகாரமும் அம்பலப்பட்டதால் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போன சி.பி.எம். கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை கண்டிராத படுதோல்வியைச் சந்தித்தது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு சி.பி.எம். கட்சிதான் காரணம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பரதன். சி.பி.எம். கட்சியோ, கட்சிக்குள் நிலவும் கோஷ்டி சண்டைதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கண்டுபிடித்து, கோஷ்டி சண்டைக்கு முடிவு கட்ட கடந்த ஜூலை 11 12 தேதிகளில் மத்திய கமிட்டி கூட்டத்தைக் கூட்டி, கோஷ்டிச் சண்டைக்கு மூலகாரணமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழுவிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதேசமயம், அவர் மாநில முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவித்தது. ஆனால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பினாரயி விஜயன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை; விசாரணையுமில்லை. இதன்மூலம் ஊழல் பெருச்சாளிகள் சி.பி.எம். கட்சியில் தலைவராகலாம் என்ற புதிய மரபை உருவாக்கியுள்ளது.

vijayansting3

சி.பி.எம். கட்சியை கோடீசுவரக் கட்சியாக மாற்றியமைத்து சாதனை படைத்தவர் என்பதால், ஊழலை மூடிமறைத்து பினாரயி விஜயனை சி.பி.எம். கட்சித் தலைமை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறது. மேலும், அரசாங்க சலுகைகள், சன்மானங்களைப் பொறுக்கித் தின்பதிலும், ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் சீரழித்து ஏறத்தாழ எல்லா மாவட்டக் கமிட்டிகளையும் அவர் தனது பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், கேரளாவில் சி.பி.எம் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்பதால், கோஷ்டிச் சண்டைக்கு முடிவு கட்டுவது என்ற பெயரில் பினாரயி விஜயன் கோஷ்டியை கட்சித் தலைமை ஆதரிக்கிறது. தற்போது மையப் புலனாய்வுத் துறையின் குற்றப்பத்திரிகைக்கு எதிராக கேரள சி.பி.எம். கட்சி நடத்தி வரும் இயக்கத்தையொட்டி வசூலிக்கப்பட்ட நன்கொடையில் விஜயன் கோஷ்டி ஊழல் செய்துள்ளதாக கட்சிக்குள்ளேயே புகார்கள் எழுந்துள்ள போதிலும், சி.பி.எம். தலைமை அது பற்றி பெயரளவுக்குக் கூட விசாரிக்க முன்வராமல் நழுவிக் கொள்கிறது.

இன்னொருபுறம், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் கரத் மீது மத்தியக் கமிட்டியில் பெரும்பான்மையாக உள்ள மே.வங்க கோஷ்டி அதிருப்தியில் உள்ளது. எனவே தனது தலைமையைத் தக்க வைத்துக் கொண்டு மே.வங்க தோஷ்டியைப் பணிய வைக்க, கேரள மாநிலத்தவரான கரத்துக்கு, தனக்கு ஆதரவாக கேரள கோஷ்டியைத் திரட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான், பினாரயி விஜயன் கோஷ்டியை கரத் வெளிப்படையாக ஆதரிக்கிறார்.

மறுபுறம், ஊழலை எதிர்க்கும் நியாயவாதியாகக் காட்டிக் கொண்டு அனுதாபம் தேடும் அச்சுதானந்தனுக்கு ஊழலை எதிர்க்கும் யோக்கியதையே கிடையாது. சி.பி.எம். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அவர், இத்தனை காலமும் சி.பி.எம்.மின் எல்லா வண்ண சந்தர்ப்பவாதங்களையும் ஆதரித்து நின்றவர்தான். பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாயவுரிமையை மறுத்து, குறுகிய இனவெறி அரசியல் நடத்தி ஆதாயம் தேடும் சி.பி.எம்.மின் படுபிற்போக்கான முதல்வர்தான் அவர். 1998இல் நடந்த கேரள மாநில மாநாட்டின் போது, பினாரயி விஜயனோடு கோஷ்டி கட்டிக் கொண்டு லாரன்ஸ் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்டினார். ராகவன், கௌரியம்மாள் முதலான மூத்த தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற துணை நின்றார். சி.பி.எம். கட்சியை கோடீசுவர கட்சியாக மாற்றியமைத்த பினாரயி விஜயனின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒத்தூதினார். குருவை விஞ்சிய சீடனாக பினாரயி விஜயன் இப்போது வளர்ந்து விட்டதால், அவரை எதிர்த்து கோஷ்டி கட்டிக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

lavalin

பினாரயி விஜயனின் ஊழலுக்கு ஒத்தூதும் கட்சித் தலைமையை எதிர்த்து அவர் கலகம் செய்யவோ, அல்லது தனிக்கட்சி தொடங்கவோ முன்வரவில்லை. மக்கள் முன் இந்த ஊழலை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டிப் போராடவும் அவர் தயாராக இல்லை. மாறாக, கட்சி முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறிக் கொண்டு அடக்கி வாசிக்கிறார்.

இந்நிலையில், அச்சு கோஷ்டி மீது அனுதாபம் காட்டுவதற்கோ, ஊழல் எதிர்ப்புப் போராளியாகக் கருதுவதற்கோ அடிப்படையே கிடையாது. ஊழலையும் பாசிச அடக்குமுறையையும் நியாயப்படுத்தக் கிளம்பிவிட்ட சி.பி.எம். கட்சியை உழைக்கும் மக்கள் புறக்கணித்து முடமாக்குவதைத் தவிர, இனி வேறு வழியும் கிடையாது.

தனபால்

ஆகஸ்ட் 09
புதிய ஜனநாயகம்

Read Full Post »

 

 

 

 

Anonymous         கரு.மூர்த்தி  said                                                                                                                                                                                                 
எணயத்தில் புரட்ச்சி பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பனுயில் சொகுசாக வாழும் நம் இணைய புரட்டி வீ(ண)ரர்கள் அசுரன் ராஜ்வனஜ் வந்து 17 பக்கங்களுக்கு பதி சொல்ல போகிறார்கள் அல்லது கைப்புள்ள வடிவேலு போல வா , என் பிளாக்குக்கு வா , வைச்சுக்கலாம் சண்டைய என்று இல்லாத மீசையை முறுக்க போகிறார்கள்கரு.மூர்த்தி

8:07 PM

Blogger அசுரன் said…

 போலி கம்யுனிஸ்டு ஒருத்தர் இருந்தார். அவர்ட்ட போய் என்னாபா இப்படி அப்பட்டமா ஏகாதிபத்தியத்துக்கு சேவை
செய்யுறியே என்ன விசயம்? இதுக்கு மார்க்ஸியத்துல என்ன வியாக்கியனம் கொடுக்கப் போற என்று கேட்டேன்?அந்த போலி கம்யுனிஸ்டுக்கோ ஒரே கோபம். என்னாடாதி நம்மள பாத்து கேள்வி கேட்டுட்டானே என்று தமது தத்துவ வியாக்கியானத்தை புரளி வடிவில் கொடுத்துள்ளனர்.இவர்களின் இதே கட்டுரையை ஒரு அதிமுக அல்லது ஒரு திமுக காரர் இவர்களை தாக்கி எழுதுவதாகக் கொண்டால்
அப்படியே பொருந்தும். அதாவது இவர்களின் கட்டுரைப் படி இவர்களை விட சிறந்த கட்சி திமுக, அதிமுக உள்ளிட்ட
வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான். வோட்டுப் பொறுக்கி என்று திமுக அதிமுக கட்சிகளை குறை கூறுவதை இந்த போலி
கம்யுனிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய இந்த வரையறை அவர்களுக்கு பொருந்துகிறதே. இப்படி இவர்கள் காபந்து
செய்யும் ஆட்கள் நிறைய பேர் – சங்கராச்சாரி, டாடா, ஜார்ஜ் புஷ் etc.மக்கள் பிரச்சனை, பொருளாதார கொள்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால், அதில் என்ன தத்துவ அடிப்படை
உள்ளது என்று கேள்வி எழுப்பினால், அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் புரளி பேச விழைந்து தாம் உண்மையிலேயே
போலி கம்யுனீஸ்டுதான் என்று நிரூபிக்கிறார் இவர். ஏனேனில் மார்க்ஸியத்தை நடைமுறையில் கொண்டவர்கள் இல்லை
இவர்கள். அதனால்தான் தமது நடவடிக்கைகளுக்கு எந்த தத்துவ வியாக்கியானமும் கொடுக்க வழியின்றி இப்படி பொருமி
கொட்டுகிறார்கள்.

எண்ணிக்கைதான் அளவு கோல் எனில் அன்றைக்கு பகத்சிங் திண்னை புரட்சியாளந்தான். இன்றைக்கு அதிமுகதான் புரட்சிகர
கட்சி.

ஆனால் பகத்சிங்கை கண்டுதான் ஏகாதிபத்தியம் நடுங்கியது. மக இக வைக் கண்டுதான் இந்துத்துவம் தமிழக்த்தில் கதறியது
பின்வருமாறு, “தமிழக்த்தை பொறுத்த வரை மக இக தான் நமது முதன்மை எதிரி’ என்று. இந்திய அளவிலும்
நக்சல்பாரிகளையே தமது முதல் எதிரிகளாக வரையறுத்துள்ளனர் இந்துத்துவாதிகள்.

ஏனேனில் மார்க்ஸிஸ்டுகளுக்கும், இந்துத்துவாதிகளுக்கும் அதிகார போட்டி தவிர்த்து சித்தாந்த போட்டி என்று ஏதுவுமில்லை
என்று இந்துத்துவவாதிகளுக்கு தெரியும். CPM தலைவர் ஒருவர் தன்னை பார்ப்பனன் என்ற பொழுதும், தீபாவளி, ரமலன்
விழாக்களுக்கு சிறப்பிதழ் வெளிய்யிட்ட போதும், சஙக்ராச்சாரிக்கு அரசு விருந்தினர் மரியாதை கொடுத்த போதும், CPM கூட
இந்த இந்துத்துவ கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியது. ஏன் நக்சலிசம் குறித்த இன்னுமொரு துரோக
நடவடிக்கையில் நமது திரு போலி அவர்கள் கூட வஜ்ரா எனும் இந்துத்துவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரினார்.

மகஇகவைக் கண்டுதான் தாமிரபரணி கோக் பிரச்சனையில் போலிஸ் பேச்சு சுதந்திரத்தையே மறுத்து தொலைக்காட்சியில்
அம்பலமாகியது. மக இக அந்த பிரச்சனையில் இறங்கியாராவிடில் CPMன் அடையாள போராட்டத்தின் வீச்சு என்ன்வென்று
தெரிந்த அரசும், போலீசும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். இந்த சம்பவத்தில் தெரிய்வருவது ஒரு கட்சியின்
பலம் என்பது புரட்சிகர சித்தாந்தம் தான் என்பது மிகத் துலக்கமாக தெரிந்தது.

லெனின் ஒரு கட்சியின் பலம் என்பதாக புரட்சிகர சித்தாந்தையே சொல்கீறார். நானும் பல முறை இந்த போலிகளிடம்
உங்களின் புரட்சிகர சித்தாந்தம் என்னவென்று கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கடைசியில் MBA படிப்பில் சொல்லித்
தரப்படும் பிழைப்புவாதமே இவர்களின் புரட்சிக்ர சித்தாந்தம் என்று புரிந்து கொண்டேன். அது மார்க்ஸியம் அல்ல
என்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்களோ MBA படிப்புதான் மார்க்ஸியம் என்றூ சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது – மக இக வின் புரட்சிகர
சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது
கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM? வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாக பொறுக்கிக்
கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில்
மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.

முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட
வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும்
நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அர்சியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கல் மக இகவினர். திரு போலி அவர்கள் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?

ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புர்ட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு – நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.

அப்புறம் மாவோயிஸ்டுக்ள் குறித்த இவர்க்ளின் கொள்கை முரன்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் மாவோயிஸ்டுகளை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மம்தாவின் பின்னால் மக இக ஒளிவாதாக கூறுகிறார் மேலும் ஜெயலலிதா மே.வாவில் இருந்தால் அவர் பின்னாலும் ஒளிவோம் என்கீறார். உண்மையில் ஜெயலலிதா முதலானவர்களின் பின்னால் ஒளிந்து வோட்டு அரசியல் நடத்திய பிழைப்புவாதிகள் யார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சரிதானே நான் சொன்னது. இவர்கள் இன்னும் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர் தாங்கி அழைகிறார்கள் என்று தெரியவில்லை.
அதற்க்கு இது வரை திரு போலியிடம் இருந்து விளக்கம் வரவேயில்லை.

About Singur:
http://tamilarangam.blogspot.com/2007/03/blog-post_01.html

******************

இதற்க்கு முன்பே ஒரு முறை இந்த போலிகள் தங்களது தத்துவ ஓட்டாண்டித் தனத்தை விளம்பரப்படுத்தி அசிங்கப்பட்டுள்ளனர். அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,

//////
சல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?

அதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு?

Maoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.

Maoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.

மற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் ‘உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது’ என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமுடியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.

************

உங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா?(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).

CPM: வோட்டு சார் வோட்டு……

நாம்: அப்போ மக்கள்?

CPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய… நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..

************

அப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

மே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா?

இதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.

அங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி?? – CPM.

பலியான விவசாயிகள் – உரிமைக்காக போராடியவர்கள்.

இங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள்? அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற்போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.

அதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன? நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை – மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.

கேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது – நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்….சவக்…தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.

****************

புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.

புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).

எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.

தனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.

அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.

தங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா? எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.

***********

அப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.

புரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக – அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.

********

வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.

மக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே? யாருக்கு ஆபத்து?

இந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது?(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)

இந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன?

இந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன?

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? அதன் அளவு, வீச்சு என்ன?

ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன?

சரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம்? சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.

*********

ஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா?

இந்த கேள்வி ஏனென்றால்….. இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே?

அல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா?

மனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே…. தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.

***************

கோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன? ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.

தங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்?

ஒரு ஜனநாயகத்துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.

இந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது ‘மார்க்ஸீயம்’ இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.

இந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.

மாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.

அய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.

தங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.

உங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.

********

நக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.

ம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்?

ஒஹோ… ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ?

அய்யா… நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.

மற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
அசுரன்
///////

அதே பதிவிற்க்கு தோழர் கட்டபொம்மன் என்பவர் அளித்த பின்னூட்டம்,

/////
நாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.

சதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது ‘வெல்லட்டும்!
வெல்லட்டும்!’ எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.

2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.

3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா?

4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்!

துரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு ‘அப்பாவிகள்’ படுகொலை என்று ஊளையிடும். உடனே ‘பார்த்தீர்களா! தோழர்! இடது தீவிரவாதம் இதுதான்.! காலம் இன்னும் கனியலை தோழர்! (செங்காயா இருக்கும் போல)” எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.

kattabomman
http://www.blogger.com/profile/26954504
//////

அசுரன்

5:02 PM

Blogger இரா.சுகுமாரன் said…
மிக மோசமான விமர்சனம்.இந்த பதிவில் அரசியல் பூர்வமான விமர்சனம் ஏதும் வைக்கவில்லை.//ம.க.இ.க.வின் பிரதான வேலை என்ன தெரியுமா? யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே! கொஞ்சம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத் தட்டி, தங்களது பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்கள்.//யாரோ ஒரு தோழர் செய்திருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த இயக்கமும் அவ்வாறு செய்கிறது என்பது போல் கொச்சைப்படுத்தியுள்ளீர்கள்.

//உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.//

அய்யா,

உளவுத்துறை தொந்தரவுகளுக்கு உட்படாமல் இருக்க அப்படி முகவரி கொடுப்பதை பலர் தவிர்ப்பார்கள். அதே காரணத்திற்காக உண்மையான பெயரையும் பயன்படுத்தாமல் புனைப்பெயரில் இயங்குவது உண்டு.
இது அமைப்பு விதி அதையெல்லாம் சொல்லி ஏதோ திருடர்கள் போல் நீங்கள் அவர்களைச் சொல்கிறீர்கள்.

//இவர்கள் நடத்தும் இத்தகைய கும்பமேளாவுக்கு நான்கு மாதம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். அப்புறம் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு 500 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு ஜல சமாதியில் கலந்து விடுவார்கள்…//

அவர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. அவ்வளவு மோசமான விமர்சனம் இது.

கும்பமேளாவும் இசைவிழாவும் ஒன்று என்கிற அளவுக்கு உங்கள் பார்வை மங்கிப் போனபின் அதைப் பற்றி பேச என்ன இருக்கிறது.

//1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்ற வாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை!//

சாதாரண பொதுமக்கள் எப்போதும் அரசில் உணர்வுடன் இருக்க மாட்டார்கள். ஆனால், தேர்தல்கள் மக்களை பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிக்கின்றன. ஆனால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாமலே பிரிந்து கிடக்கின்றனர்.

ஆனால், தேர்தலில் நிற்காத அரசியல் கட்சிகள் அந்த அளவு மக்களை திரட்ட முடியவில்லை என்பது தான் உண்மை.

சாதியாக பல நூற்றாண்டுகளாக இருந்த வன்னியர்களை “பாட்டாளி மக்கள் கட்சி” என்ற பெயரில் பல வன்னியர்களை சாதியாக திரட்டினார் இராமதாசு, அதே போல திருமாவளவன்.

தேர்தலில் நிற்கும் வரை அந்த கட்சிகள் முக்கியத்துவம் பெறவில்லை. இவர்கள் தேர்தலில் நிற்கவில்லை எனவே அதிக மக்கள் செல்வாக்கு பெற இயலவில்லை. அதனைக் காரணமாக வைத்து கொச்சைப்படுத்துவது சரியல்ல.

சி.பி.எம் கூட மாநிலத்திற்கு மாநிலம் ஒரு கொள்கை வைத்துக் கொள்கிறது.
அப்படியானால் உங்கள் கட்சி மாநிலக்கட்சியா? இந்தியக்கட்சியா? என பல்வேறு கேள்விகளைக் கேட்கலாம்.

ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.

3:05 PM

Blogger செல்வன் said…

காவிரி பிரச்சனையில் கர்னாடகாவிலுள்ள நக்சல் இயக்கங்களும், தமிழக நக்சல் இயக்கங்களும் ஒரே நிலையையா கொண்டுள்ளன?இல்லை ஆந்திராவிலுள்ள நக்சல் இயக்கங்கள் பாலாறில் அணைகட்டி தமிழகத்துக்கு வரும் நீரை ஆந்திரா தடுப்பதை எதிர்க்கின்றனவா?இல்லையே?பிறகு ஏன் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி மீது பாய்கிறீர்கள்?சிதம்பரம் போலிஸ் ஸ்டேஷனில் பத்மினி கற்பழிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக நின்ரது மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதானே?இன்று அவருக்கு கல்யாணம் செய்து வைத்து ஒரு புதுவாழ்வையும் தந்து கோர்ட்டில் போராடி நீதி பெற்றுத்தந்ததும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிதானே?இதே பிரச்சனைக்கு நக்சல் இயக்கத்தை சேர்ந்த லெனின் போலிஸ் ஸ்டேஷனை தகர்க்க வெடிகுண்டு கட்டிக்கொண்டு போய் அவர் இறந்தது தான் மிச்சம்.எந்த அணுகுமுறை இந்த விஷயத்தில் பலன் கொடுத்திருக்கிரது என நீங்களே பாருங்கள்.

இதேபோல் போலிசால் கற்பழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு நீதி வாங்கித்தந்து போராடியது மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம் தான்.ஜனநாயக முரையில் இப்படி அவர்கள் வெற்றி ஈட்டி மக்களுக்கு நல்லது செய்வதனால் அவர்களை போலிகள் என்கிறீர்களானால் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே?

இது ஏதோ நான் புதிதாக சொல்வதாக நினைக்க வேண்டாம். பல மாதங்களுக்கு முன்பே இதுபற்றி பதிவிட்டிருக்கிறேன்.

http://holyox.blogspot.com/2006/08/141.html

11:53 AM

Blogger ஸ்டாலின் said…

பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் மார்க்சின் பிறந்தநாளை மேற்குவங்கத்தில் 7 விவசாயிகளின் பினத்தின் மீது ஏறி நின்று கொண்டாடிய கூட்டத்தை சேர்ந்தவரோடு பேச எங்களுக்கு ஒன்றுமில்லை, உலக பாட்டாளி வர்க்கத்தின் உன்னதமான் சின்னத்தை ‘புரட்சி தலைவியின்’ ஆசி பெற்ற சின்னமென்று’ அ.தி.மு.க கொடி வண்ணத்தில் சுவர்களில் வரைந்து வைத்தவர்களோடு எப்படி மார்க்சியம் குறித்து விவாதிக்க முடியும்.. ஆட்சியிலிருக்கும் இடங்களிலே மக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டும் நீங்கள் எந்த அருகதையில் பயங்கரவாதம் குறித்து பதிவிடுகிறீர்கள். ஒருவேளை உழைக்கும் மக்களுக்கெதிரான அரசபயங்கரவாதம் உங்களுக்கு உவப்பானதா? கோழியை போயஸ்தோட்டத்திலும் கோபலபுரத்திலும் தேடுவதை விட்டுவிட்டு முதலில் கூரையிலாவது தேடுங்கள் பிறகு குறை சொல்லலாம். தமிழ் மக்கள் இசை விழாவில் 500 பேர் கலந்து கொண்டார்கள் என்று கூறும் அளவிற்கு, தரம் தாழ்ந்த இந்த புரளி கட்டுரையை பற்றி பேச அவசியம் இல்லையென்று கருதுகிறேன். அதனையும் கும்பமேளாவோடு ஒப்பிடும் உங்கள் சிந்தனையை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது தயவு செய்து அந்த செங்கொடியை கீழே வைத்துவிடுங்கள்..
அசுரன், பாவங்க சந்திப்பு ‘புரட்சிதலைவி’யோடு கூட்டனி வைச்சு புரட்சி செஞ்சு போர்(bore) அடிச்சு போய் சரி ‘புரட்சிகலைஞரோடு’ சேர்ந்து புரட்சி பண்ணலாமானு யோசிக்கிற இடைப்பட்ட நேரத்துல் கொஞ்சம் இணையத்துலயும் வந்து புரட்சி செய்யலாம்னு வந்தா இப்படியா சந்தியில் நிறுத்திவைச்சு நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்பீங்க. CPM காம்ரேடுகள் ம க இ க மாதிரி தின்னை புரட்சியாளர்களோடெல்லாம் தத்துவ விவாதம் பண்னுவாங்களா? அவங்களே பாவம் தோழர்.டாடா, தோழர்.சங்கராச்சியார் போன்ற எத்தனையோ உழைக்கும் வர்கத்தின் இரட்சகர்கள்கிட்ட பேசவே நேரமில்லாம கவலைபடுறாங்க. ம க இ க மாதிரி ஒன்னுமில்லாததுங்கள்ட(துட்டு இல்லாத ஆளுங்க) பேசி நாட்டுல தொழில் வளர்ச்சியா கொண்டுவரமுடியும்? புரட்சிதான் கொண்டுவரமுடியும்!! புரட்சிதான் இப்ப முக்கியமா? நாட்டுக்கு தொழில் வளர்ச்சி கொண்டுவர்றத விட்டுட்டு மக்கள், புரட்சி, சோசலிசம், மார்க்சியம்னு, நீங்க வேற… மக்களை உய்விக்க வந்த மகராசா தோழர்.டாடா இருக்கும்போது மார்க்சியத்துகென்னங்க அவசியம். புரட்சிக்குதான் என்ன அவசியம். டாடாயிசம்தான் CPMன் உயிர்மூச்சு, டாடாயிசத்துக்கு எதிரா சிங்கூர் என்ன சிங்கப்பூரே வந்தா கூட சுட்டு பொசுக்கிடுவாங்க ஆமா? ஜாக்கிரதை!!ஸ்டாலின்

12:28 PM

Blogger செல்வன் said…

2006 ஆகஸ்டில் நான் எழுதிய பதிவு இது,http://holyox.blogspot.com/2006/08/141.htmlநான் பள்ளியில் படிக்கும்போது அந்தியூர் விஜயா,சிதம்பரம் பத்மினி மற்றும் வாச்சாத்தி கற்பழிப்பு வழக்குகள் தமிழ்நாட்டையே உலுக்கியவை.1991- 1996 அதிமுக அரசின் ஆட்சியில் நடந்த இந்த 3 சம்பவங்களும் போலிஸாரால் நடத்தப்பட்டவை என்பது தான் கொடுமை.இந்த 3 வழக்குகளிலும் இருந்த ஒற்றுமை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள்,தாழ்த்தப்பட்டவர்கள்.பாதிப்பை ஏற்படுத்தியது போலிஸ்.போரிட வலுவற்ற பத்மினியும்,விஜயாவும்,வாச்சாத்தி பழங்குடி மக்களும் தைரியமாக போரிட வந்தது தான் நீதி கிடைக்க உதவியது. இம்மூன்று வழக்குகளிலும் இவர்களுக்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாதர் ஜனநாயக சங்கத்தினர்.வழக்குகளில் போராட மட்டுமின்றி இவர்களுக்கு மறுவாழ்வையும் ஏற்படுத்த அவர்கள் உதவினர்.வாச்சாத்தி பத்மினீக்கு நீதி கிடைத்ததோடு இன்னொரு திருமனமும் செய்து வைத்தனர். மேல்மட்டத்தில் எப்படியோ,கீழ்மட்ட மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு இருப்பது இதனால் தான்.இந்தியாவில் ஜனநாயகம் தழைப்பதும் இம்மாதிரி சம்பவங்களால் தான். வாழ்க ஜனநாயக மாதர் சங்கம்

12:33 PM

Blogger அசுரன் said…

குண்டு கட்டி வெடித்தது மக இக வா? இங்கு சந்திப்பு மக இக பற்றி புரளி பேசுகிறாரா அல்லது வேறு யாரையும் பற்றியா?கோக் பிரச்சனையில் திருநெல்வெலியில் மக்களை திரட்டி போராடியது மக இகவா அல்லது உங்க அபிமான CPM ஆ? அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள்? ஏன் திரிபுவாதம். ஓ… பேசுவது $சல்வன் அல்லவா? அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா? மறந்து விட்டேன். மன்னிக்கவும் :-)))விசயம் மக்கள் பிரச்சனைகளில் கொள்கை அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான்.பொது மக்கள் பிரச்சனைகளை எல்லா கட்சிகளும் எடுத்துச் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஏன் மேவாவிலும், தில்லியிலும் கூட BJPதான் மக்கள் பிரச்சனைகளை எடுத்து போராடியது. இங்கு மார்க்ஸியர் என்று சொல்ல CPMக்கு என்ன அருகதை உள்ளது என்பது பற்றித்தான் பேச்சு.

மாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாதம் தவிர்த்து உங்களது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்ட எதுவும் இல்லை என்பது பெரிதும் பரிதாபத்திற்க்குரியதுதான். மாவோயிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் உள்ளூர் அளவில் தேச வெறி கும்பலுடன் தூணை போவதிலும் வெளிப்படுகிறது. அவற்றையும் மிக கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள் பிற புரட்சிகர அமைப்பினர். இது குறித்தெல்லாம் $சல்வனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உட்கட்சி விமர்சனம் சுய விமர்சனம் கட்சிகளிடையேயான் விமர்சனங்கள் கருத்து, சித்தாந்த போராட்டங்கள் குறித்தேல்லாம் $சல்வன் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். அவர் அரசு பாடப்புத்தகத்தில் பைக் திருடியவர்கள் என்று குறிப்பிட்டதை மட்டுமே படித்து வளர்ந்த அறிவு ஜீவி அல்லவா :-))

CPM-ன் ஏகாதிபத்திய கூட்டு இணையத்திலும் பிரதிபலிக்கிறது :-))

$சல்வனுக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான எதிரிகளை எதிர்க்க ஒரு திரிபுவாதி வேண்டும். திரிபுவாதிகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துபவர்களை எதிர்க்க ஒரு ஆளும் வர்க்க கூட்டணி வேண்டும்.

வாழ்த்துக்கள் $சல்வன்-சந்திப்பு கூட்டணி. வாய்ப்பிருந்தால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

அசுரன்

12:57 PM

Blogger அசுரன் said…

//ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.//இரா. சுகுமாரன்,மேற்சொன்ன காரணத்தை இதற்க்கு முன்பே சந்திப்புவிடம் குறிப்பிட்டு CPMயை விமர்சிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்தியே வந்தேன். ஆயினும் பொது எதிரியை அம்பலப்படுத்துவது, பொது எதிரி யார், நமது சித்தாந்தம் என்ன என்பது குறித்தெல்லாம் எந்தவொரு அடிப்படை புரிதலும் இன்றி முதலில் சந்திப்பு ஒரு பதிவு போட்டு இந்துத்துவக்காரனுடன் கூட்டு சேர்ந்தார். இப்பொழுது ஏகாதிபத்தியவாதியிடம் கூட்டு சேர்கிறார். இவரது அமைப்பில் இன்னும் மார்க்ஸியம் என்று சொல்லிக் கொள்ள என்ன மிச்சமிருக்கீறது என்று இன்று வரை அவர் சொல்ல மறுக்கீறார். இதோ இன்று அத்துமீறி நுழைய முயன்ற போலிசுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் 11 பேர் பலி. CPM யாருக்கான கட்சி?அசுரன்

1:09 PM

Blogger அசுரன் said…

I think Santhippu has missed my these below Two comments:$elvan,குண்டு கட்டி வெடித்தது மக இக வா? இங்கு சந்திப்பு மக இக பற்றி புரளி பேசுகிறாரா அல்லது வேறு யாரையும் பற்றியா?கோக் பிரச்சனையில் திருநெல்வெலியில் மக்களை திரட்டி போராடியது மக இகவா அல்லது உங்க அபிமான CPM ஆ? அங்கென்ன துப்பாக்கி துக்கியா போராடினார்கள்? ஏன் திரிபுவாதம். ஓ… பேசுவது $சல்வன் அல்லவா? அவருக்கு தெரிந்த ஒரே வாதம் திரிபுவாதம் அல்லவா? மறந்து விட்டேன். மன்னிக்கவும் :-)))

விசயம் மக்கள் பிரச்சனைகளில் கொள்கை அடிப்படையில் என்ன முடிவெடுக்கிறீர்கள் என்பதுதான்.

பொது மக்கள் பிரச்சனைகளை எல்லா கட்சிகளும் எடுத்துச் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஏன் மேவாவிலும், தில்லியிலும் கூட BJPதான் மக்கள் பிரச்சனைகளை எடுத்து போராடியது. இங்கு மார்க்ஸியர் என்று சொல்ல CPMக்கு என்ன அருகதை உள்ளது என்பது பற்றித்தான் பேச்சு.

மாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாதம் தவிர்த்து உங்களது தவறுகளை மறைத்து புனித வட்டம் கட்ட எதுவும் இல்லை என்பது பெரிதும் பரிதாபத்திற்க்குரியதுதான். மாவோயிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் உள்ளூர் அளவில் தேச வெறி கும்பலுடன் தூணை போவதிலும் வெளிப்படுகிறது. அவற்றையும் மிக கடுமையாகவே விமர்சித்து வருகிறார்கள் பிற புரட்சிகர அமைப்பினர். இது குறித்தெல்லாம் $சல்வனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உட்கட்சி விமர்சனம் சுய விமர்சனம் கட்சிகளிடையேயான் விமர்சனங்கள் கருத்து, சித்தாந்த போராட்டங்கள் குறித்தேல்லாம் $சல்வன் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மிதான். அவர் அரசு பாடப்புத்தகத்தில் பைக் திருடியவர்கள் என்று குறிப்பிட்டதை மட்டுமே படித்து வளர்ந்த அறிவு ஜீவி அல்லவா :-))

CPM-ன் ஏகாதிபத்திய கூட்டு இணையத்திலும் பிரதிபலிக்கிறது :-))

$சல்வனுக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான எதிரிகளை எதிர்க்க ஒரு திரிபுவாதி வேண்டும். திரிபுவாதிகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துபவர்களை எதிர்க்க ஒரு ஆளும் வர்க்க கூட்டணி வேண்டும்.

வாழ்த்துக்கள் $சல்வன்-சந்திப்பு கூட்டணி. வாய்ப்பிருந்தால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

அசுரன்

****

//ஆனால், பொதுப்படையாக மார்க்சியம் பற்றி எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இது உரமாகிவிடும் என்பதால் இத்தகைய கேள்விகளை நாம் இணையத்தில் எழுப்புவதில்லை.//

இரா. சுகுமாரன்,

மேற்சொன்ன காரணத்தை இதற்க்கு முன்பே சந்திப்புவிடம் குறிப்பிட்டு CPMயை விமர்சிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்தியே வந்தேன். ஆயினும் பொது எதிரியை அம்பலப்படுத்துவது, பொது எதிரி யார், நமது சித்தாந்தம் என்ன என்பது குறித்தெல்லாம் எந்தவொரு அடிப்படை புரிதலும் இன்றி முதலில் சந்திப்பு ஒரு பதிவு போட்டு இந்துத்துவக்காரனுடன் கூட்டு சேர்ந்தார். இப்பொழுது ஏகாதிபத்தியவாதியிடம் கூட்டு சேர்கிறார். இவரது அமைப்பில் இன்னும் மார்க்ஸியம் என்று சொல்லிக் கொள்ள என்ன மிச்சமிருக்கீறது என்று இன்று வரை அவர் சொல்ல மறுக்கீறார். இதோ இன்று அத்துமீறி நுழைய முயன்ற போலிசுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் 11 பேர் பலி. CPM யாருக்கான கட்சி?

அசுரன்

6:29 PM

Blogger rajavanaj said…

செல்வன் – சந்திப்பு! வெகு பொருத்தமான கூட்டனி!சந்திப்பு! இது பொன்ற விவாதங்களில் உங்களுக்கு ஆதரவாய் வரும் முதலாளித்துவ / இந்துத்துவ நபர்களே உணர்த்துகிறார்கள் – நீங்கள் யாருக்கு நன்பர் என்று.

6:47 PM

Blogger அசுரன் said…

Not “முதலாளித்துவ “It is “Imperialists”

12:30 PM

Anonymous ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் said…
//
இது பொன்ற விவாதங்களில் உங்களுக்கு ஆதரவாய் வரும் முதலாளித்துவ / இந்துத்துவ நபர்களே உணர்த்துகிறார்கள் – நீங்கள் யாருக்கு நன்பர் என்று.
//ஆமா, இவன் சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா அடிச்சா ரொம்ப ரொம்ப நல்லவன். இவனுக்கு புடிக்காதவன் சொல்றது சரின்னா ரொம்ப ரொம்ப கெட்டவன். போய்யா புடுக்கு.

12:49 PM

Blogger arasubalraj said…
உங்களது துர்வாசக் கோபத்திற்கும், உங்களது ‘ஆழமான அரசியல்’ விமர்சனத்திற்கும் பதில் சொல்லும் ‘ஆற்றல்’ எனக்கு இல்லை.அடியேன் ஒரு சின்னக் கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். ‘முட்டுச்சந்தில் திணறும் சி.பி.எம்’ என்ற ம.க.இ.க-வின் நூலை தாங்கள் பார்த்ததுண்டா? அந்நூல் எழுப்பும் சி.பி.எம்ன் அடிப்படையான சித்தாந்த விலகல்கள் குறித்து இதுவரை எந்த சி.பி.எம் அறிவுஜீவியும் பதிலளிக்க மறுப்பதன் காரணம் என்ன? ஒரு எதிர் விமர்சனமோ, விளக்கமோ தருவதற்கு இது நாள்வரை சி.பி.எம் தமிழ் மாநிலக் கமிட்டி முன்வராதற்கு காரணம் என்ன? சி.பி.எம் அணிகள் நக்சலைட் பூச்சாண்டி காரணமாக மாற்று அமைப்பு வெளியீடுகளை படிக்கவே மாட்டார்கள் என்ற ஆழமான நம்பிக்கைதான் காரணம் என்று சொல்லலாமா?

5:44 PM

Blogger ravi srinivas said…
Both CPI(M) and Ma.Ka.I.Ka have some similarlities too.Both support Stalinism and their marxisms despite variations are
irrelevant. They are different sides of an useless coin that has no value even as an old coin.

7:11 PM

Blogger நெருப்பு சிவா said…
சந்திப்பு,நல்ல பல பின்னூட்டங்களை எழுப்ப உங்கள் பதிவு உதவியிருக்கிறது.அசுரன்,எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடி அடித்திருக்கிறீர்கள். இருந்தாலும் வலித்ததா என தெரியவில்லை. just kidding :))

11:23 PM

Blogger லக்கிலுக் said…

//இதேபோல் போலிசால் கற்பழிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு நீதி வாங்கித்தந்து போராடியது மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம் தான்.//நண்பர் செல்வனுக்கு “தோழர்” வேடம் காமெடியாக இருக்கிறது  இந்த வேடம் போடுவதற்கு முன்பாக அம்பானிக்கு சொம்பு தூக்காமல் இருந்திருக்கலாம்.தலைவா! அத்தியூர் விஜயா வழக்கில் அவருக்கு நீதி வாங்கித் தந்த தோழர் புதுவை சுகுமாரன் அவர்களின் பங்களிப்பை மறுக்க வேண்டாம். அவரது உழைப்புக்கும், மனிதநேயத்துக்கும் கிடைத்த வெற்றி அது!

11:07 AM

Anonymous Anonymous said…
தல பஞ்சு விட்டிருக்கீங்க…. கும்மாங் குத்துதான் போ…அசுரன்
தியாகு
செம்மலர்
ஸ்டாலின்
கரும்பலகை
…….

6:07 PM

Anonymous Anonymous said…
தல இதுதான் வர்க்கப் போராட்டமா?

2:03 PM

  

 கீழே உள்ளது வினவு தளத்தில் அம்பலப்படுத்தப்பட்ட போலிகளை பற்றிய  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !  என்கிற‌ க‌ட்டுரைக்கு உண்மையான‌ ம‌ன‌ நோயாளியோ என்று அனைவரும் அஞ்சும் படி நவ‌வதாரம் எடுத்து ஆடியவருக்கு தோழர் வினவு அலித்த பதில் அவசியம் கருதி அதுவும் இங்கே இடப்படுகிறது. 

  •  

  •  

  •  

  •  

  • நண்பர்களே,

    காவலன், விடுதலை, விடுதலை முழக்கம், அன்புள்ள அனானி, வேடிக்கை பார்ப்போர் சங்கம், மற்றும் (எமது அமைப்பின் பெயரில்) ம.க.இ.க ஆதரவாளன்,( எமது தோழர்களின் பெயரிலும்) மருதையன், அசுரன், என்ற பெயரில் சி.பி.எம் சார்பாக வெறுப்பையும், அவதூறுகளையும், துவேஷத்தையும் கக்கும் இந்த நபர் ஒருவரே. வோர்ட் பிரஸில் பின்னூட்டம் இடுபவர்களின் கணினி ஐ.பி.எண் தளத்தை இயக்குபவர்களுக்கு தெரியும். இதன்படி மேற்கண்ட அவதாரங்களில் வந்திருக்கும் நபரின் ஐ.பி.எண் ஒன்றுதான். ஒரே எண்ணில் ஒருவர்தான் எழுதவேண்டுமென்பதில்லை. ஓரிருவர் கூட எழுதலாம். இருப்பினும் இவர்களின் சூத்திரதாரி ஒருவர்தான்.

    அவர் பெயர் ஜி. இரமேஷ் பாபு, இவர் டைபியின்,( DYFI ) அதாவது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாட்டு தலைவர். இவரது சொந்த ஊர் சிதம்பரம். இருப்பது பாண்டிச்சேரி. வந்து போவது சென்னை. இவரது மனைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேலையில் சேருவதற்கு முயற்சி செய்கிறார். இதற்காக இரமேஷ் பாபு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கிறார். தொகை கூடக்குறைய இருக்கலாம். ரமேஷ்பாபு சரியான தொகையை அனுப்பினால் திருத்திக் கொள்வோம்.

    இவர் சி.பி.எம்மின் முழுநேர ஊழியர். ஒரு முழுநேர சி.பி.எம் ஊழியரே தனது சொந்த வாழ்க்கையில் லஞ்சங்களோடு வாழ்கிறார் என்பதிலிருந்து இவர் மற்றும் இவரது கட்சியின் யோக்கியதயை அறிந்து கொள்ளலாம். மற்றபடி இவருக்கு பிரச்சினை என்னவென்றால் அவாளது இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் ம.க.இ.கவை நாடி வருவதுதான். அதற்காக அவர்களிடம் எமது அமைப்பு பயங்கரவாதிகளின் அமைப்பு என்று பீதியூட்டுகிறார். அப்படியாவது அந்த இளைஞர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நப்பாசைதான்.

    சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக எமது அமைப்புக்களின் தோழர்கள் போராடி வெற்றி பெற்றது இவரது உள்ளத்தை இன்று வரை அரித்துத் தின்கிறது. அதனாலேயே சிதம்பரம் போராட்டத்தை டைபிதான் நடத்தியதாக ஒரு சுவரோட்டி போட்டு சுய இன்பம் கண்டு மக்களிடம் அம்பலப்பட்டு போனார். சிதம்பரம் போராட்டத்தில் பல கட்சிகள் எங்களுடன் இணைந்தாலும் சி.பி.எம் மட்டும் இணையவில்லை. காரணம் பார்ப்பனர்கள் என்ற சொல்லை பயன்படுத்தியது இவர்களுக்கு ஒத்துவரவில்லையாம். இந்த இலட்சணத்தில் இவர் எம்மை பார்ப்பன அமைப்பு என்று ஊளையிடுவது நல்ல தமாஷ்.

    மற்றபடி தனது பூணூல் கல்யாணம் நடத்திய சோமநாத் சட்டர்ஜி, தான் முதலில் ஒரு இந்து அப்புறம்தான் க்மயூனிஸ்டு என்று புல்லரிக்கவைத்த மேற்கு வங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி போன்றோரும், இங்கே பொறுக்கியாக அம்பலமான ஜெயந்திர சங்கராச்சாரிக்கு அரசு மரியாதை செய்த கேரள சி.பி.எம் அரசும் இந்தக் கட்சியின் பார்ப்பனிய விசுவாசத்தை அப்பட்டமாக காண்பிக்கும் எடுத்துக் காட்டுக்கள்.

    மற்றபடி பூணூல் போடக்கூடாது. மாட்டுக்கறி சாப்பிட வேண்டும், சாதி மறுப்புத் திருமணம்தான் செய்யவேண்டும் என விதிமுறையைக் கொண்டு வந்தால் சி.பி.எம் கட்சி ஒரே நாளில் அழிந்து போவது உறுதி. எங்கள் அமைப்பில் இதையும், இதற்கு மேலேயும் பார்ப்பனிய்த்திற்கு எதிரான நடைமுறையை எமது தோழர்கள் கடைபிடிக்கிறார்கள். எனில் பார்ப்பனியத்தில் பூத்துக் குலுங்குவது யார்?

    பார்ப்பனியத்தின் இளைய பங்காளி பாசிச ஜெயல்லிதாவின் முந்தானைக்குள் பேடித்தனமாக ஒளிந்து கொண்டிருக்கும் இந்த சி.பி.எம் கட்சியினர் புரட்சித் தலைவியை எதிர்த்து இன்று ஒரு வார்த்தை வெளியே பேசுவதற்குத் தயாரா? அம்மாவின் புகழ் பாடும் இந்த பக்தர்களின் யோக்கியதையை என்னவென்று சொல்ல?

    இந்த விவாத்தில் பல தோழர்கள் சி.பி.எம்மின் புரட்டு வாதத்தை போட்டு உடைத்திருக்கின்றனர். அவை எதற்கும் நேரடியாக பதிலளிக்க முடியாத நபர் இறுதியில் எம்மை பயங்கரவாதியாக காட்ட முயல்கிறார். இணையத்தில் இவர்களது யோக்கியதை சந்தி சிரிப்பதால் தீக்கதிரில் பொய்யும் புரட்டுமாக இன்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் பல்லாவரத்தில் நக்சலைட்டுகள் ஈழத்திற்காக பிரச்சாரம் செய்வதாகவும், அதை அரசு ஒடுக்கவேண்டுமெனவும் கட்டளை இட்டிருக்கின்றனர். இந்த செய்தி இப்படி வந்த்தில் ஒரு நல்லது இருக்கிறது. இனி ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அனைவரின் முன்னும் சி.பி.எம்மை அம்மணமாக்குவதற்கு இந்த செய்தி ஒன்றே போதும். அவ்வகையில் இதற்காக எமது நன்றி.

    தி.க.வீரமணி முன்பு போயஸ் தோட்டத்து பூஜாரியாக மணியடித்துக் கொண்டிருந்த போது வீரமணியிடமிருந்து பெரியாரை காப்பாற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து வீரமணியின் யோக்கியதையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம். அப்போது எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கற்ற வீரமணி எடுத்த உளுத்துப் போன ஆயுதம்தான் பார்ப்பனத் தலைமை என்ற அவதூறு. உண்மையில் இந்துமுன்னணியையும், ஆர்.எஸ்.எஸ் ஐயும் களத்தில் சந்திப்பது நாங்கள் மட்டும்தான். அதனால்தான் இந்து முன்னணியினர் எங்களை எதிரிகளாக எல்லாக் கூட்டங்களிலும் அறிவித்திருக்கின்றனர்.

    நாங்கள் கொள்கைகளில் தீவிரவாதி. போலிக் கம்யூனிஸ்டுகளான சி.பி.எம் கட்சியோ கொள்கைகளை துறப்பதில் பிழைப்புவாதி.

    தி.க, பா.ம.க, தமிழனவாதிகள், அப்புறம் சி.பி.எம் முதலான கட்சிகள் எல்லாம் எம்மால் விமரிசிக்கப்படும் போது வைக்கும் முதல் வாதம் எங்களை மட்டும் ஏன் தொடர்ந்து விமரிசிக்கிறீர்கள் என்பதுதான். எங்கள் விமரிசனங்கள் அரசியில் ரீதியானவை. அதற்குபதிலளிக்க வக்கற்றவர்கள் இப்படித்தான் எதாவது அவதூறுகளை வைத்து சமாளிக்க முயல்கின்றனர். அதனால்தான் சிபி.எம்முக்கு எங்கள் விமரிசனங்கள் தீயாய்ச் சுடுகின்றன.

    சூடம் பட்டு .கள் குடித்த குரங்கு போல இரமேஷ் பாபு கண்டதையும் எழுதுவதற்கு காரணம் இதுதான். இனி இவர் எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் தனது ஆபாச எழுத்துக்களை மேலும் தொடரமாட்டார் என நினைக்கிறோம்.

    நட்புடன்
    வினவு

  • Read Full Post »