Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புதிய ஜனநாயகம்’ Category

COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)
 
COMMUNIST PARTY OF INDIA (MUMMYIST)

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

 வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, “போடா வெண்ணை” என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான சாதி வெறியன் முத்துராமலிங்கன்

தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சகாவான தேவர் சாதி வெறியன் முத்துராமலிங்கனுக்கு மாலையிடும் தோழர் ஜெ

இடையில் மூன்றாம் அணி என்று சற்று “பாவ்லா” காட்டினார்கள். “குடியரசுத் தலைவர்’ தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி! இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.

இத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று “மார்க்சிஸ்ட்’ கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.

 

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

அனைத்து இந்திய அய்யர் தி.மு.க‌

இந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக “நக்கீரன்” எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது “மார்க்சிஸ்ட்’ கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.

ஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் “பில்டப்” கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.

மதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா? மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே? இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது? எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா?

 ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளைக்காரிகள் ஜெயா&சசி கும்பல்

அம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார்? இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.

இரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள்? மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும்? தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே?

இவ்வளவும் எதற்காக? எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே? அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன? நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

 இளநம்பி

புதிய ஜனநாயகம் ஜன 09

Read Full Post »

சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், “வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை”  என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்காக நடத்தும்

 பிரச்சாரமோ என்று நாம் கருதிக்கொண்டு அருகில் போய் பார்த்த பிறகுதான், அது  சி.பி.எம். கட்சி சார்பு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டு விளம்பரம் என்பது தெரிந்தது.   மாநாடு நடைபெற்ற கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் கலை நுணுக்கம் மிக்க பல கருத்தோவியங்களையும், கவிதை வீச்சுக்களையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

“எல்லாப் பேன்களையும் நசுக்கியாச்சு. அட்டைகளை?” என்று அவர்களின் கவிதை தெருவெங்கும் கேள்விகேட்டது. தமிழகத்தையே உறிஞ்சும் அட்டையான பாசிச ஜெயாவோடு  கூட்டணி கட்டியிருக்கும் சி.பி.எம். செயலாளர் என்.வரதராசன் மட்டும் இதைப் பார்த்திருந்தால்…..?

இன்னொரு கருத்தோவியம் நடைபாதைப் பழவியாபாரியுடன்; “நேற்று வண்டியில் விற்றாய். இன்று கூடையில்; நாளை….? தூரத்தில் சிரிக்கும் வால்மார்ட்” என்று சொன்னது. கேரள மாநிலத்தில் ‘தோழர்களின்’ ஆசியுடன் நூற்றுக்கணக்கில் திறக்கப்பட்டிருக்கும் ‘ரிலையன்ஸ் பிரஷ்’ நமது நினைவுக்கு வந்து தொலைத்தது.

தமுஎச கவிதை

தெருவெங்கும் வைத்திருந்த ஓவியங்களில் சிறுமிகள் கிழிந்த துணிகளுடன் ஏங்கிக் கொண்டிருந்தனர்.  அதேநேரத்தில், சென்னையின் ஜவுளிக்கடலான ‘சென்னை சில்க்ஸ்’சின் முதலாளி நமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஊர்வழி போவதற்கென்று ஆளுக்கொரு கருப்பு ‘டிராவல் பேக்’ கொடுத்திருந்தார்.

தேர்ந்தெடுத்த முற்போக்குக் கவிதைகளைத் தியேட்டருக்கு உள்ளே கொடியில் துணி துவைத்துக் காயப்போடுவதைப் போலத் தொங்க விட்டிருந்தனர். அவற்றில் பிற்போக்குக் கழிசடை கண்ணதாசனும் இடம் பெற்றிருந்தார்.

அருகிலேயே ஒரு வண்ணப்படமும் இருந்தது. அதில் செங்கற்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் சித்தாள் பெண்மணியும்,“நம்பிக்கையோடு இரு. நாளை உன் கனவும் வீடாகும்” என்ற வாசகமும் கீழே ‘மராட்டிய வங்கி’யின் பெயரும் இருந்தன.

 

நன்கொடை தந்த வங்கியின் வீட்டுவசதிக்கடன் விளம்பரத்தையே இங்கு வைத்துவிட்டார்களோ என்ற மயக்கம் எழுந்தது.

அரங்க வாயிலில் நமது கண்ணில் பட்டதோ யுனைடெட் இன்சூரன்சு, பி.எஸ்.என்.எல்., ரெப்கோ வங்கி விளம்பரங்கள். இந்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்று கூடி ஜனநாயகப் புரட்சியை நடத்த த.மு.எ.ச.வுக்குக் கை கொடுக்க முன்வந்துவிட்டதை நினைக்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது.

வாழ்த்துரை வழங்க சகல தரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்திருந்தனர்.  மத்தியில் கூட்டணியை விட்டு விலகிவிட்டாலும்,  பெருநிதி புழங்கும் மைய அரசின் நிறுவனமான செம்மொழி ஆய்வு மையத்துடன் த.மு.எ.ச. இணைந்து சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருவதால், அந்த நன்றியுணர்வுடன் அந்த மையத்தின் முனைவர் ராமசாமியையும் ஆசிவழங்க அழைத்திருந்தார்கள்.

Photo Sharing and Video Hosting at Photobucketஇ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் முதல் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ அரசைக் கவிழ்த்ததில் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் பங்கு பற்றிய புதிய நூலை அரங்குக்கு வெளியே  விற்றுக்கொண்டிருந்த இவர்களே, சி.ஐ.ஏ.வின் பிரதியான போர்டு பவுண்டேசன் நடத்தும் அம்பேத்கர் ஆய்வு மையம் (பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம்) சார்பாக தர்மராஜனை  ஆசிவழங்க அழைத்திருந்தனர் .

த.மு.எ.சங்கத் தலைவர் அருணன், சங்கத்துக்கும் கோடம்பாக்கத்துக்கும் உள்ள பாரம்பரியத்தை எளிமையாக விளக்கி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். மறைந்த கோமல் சுவாமிநாதன், சங்கத்துக்கும் சினிமாக்காரர்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தார் என்றார். என்ன இருந்தாலும் எழுத்தாளர் அல்லவா? புரோக்கர் வேலைன்னு மக்கள் மொழியில் கொச்சையாகவா சொல்ல முடியும்? “கோமலுக்குப் பின்னர் சினிமாவில் இருப்பவர்கள் நம்மோடு நேசத்தோடு இருக்கிறார்கள். நம்ம செயலாளரோட கதை கூட படமாக்கப்பட்டு வெற்றிநடை போடுகிறது” என்று அவர் சொன்னதும் அரங்கமே, கைதட்டலால் அதிர்ந்து போனது.

கருத்து வேறுபாடுகளையும் அனுமதிக்கும் அமைப்பு இது எனக் காட்டுவதாக, “மும்பையில் தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிட்டு மடிந்தவர்களுக்காக நாம் மெழுகுவர்த்தி கொளுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாட்டுக்காகத் தினமும் சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கிச் சாகின்றவனை கவனக்குறைவால் இறந்ததாகச் சொல்லுகிறோம்” என்று மெழுகுவர்த்தி கொளுத்திய சி.பி.எம். கட்சியைக் கண்டித்தார், ஆதவன் தீட்சண்யா. அடுத்து அவர், நந்திகிராமில் தமது கட்சி செய்த படுகொலையைச் சாடிவிட்டு, அங்கே கொல்லப்பட்டவர்களுக்கு மெழுவர்த்தி ஏற்றச் சொல்லுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அதிலிருந்து ஒரே தாவாய்த் தாவி விளிம்புநிலை மனிதர்களான அரவாணிகள் பற்றியும் உதிரிகள் பற்றியும் நாம் அனுதாபம் கொள்ளவேண்டியதன் அவசியத்தைச் சொல்லிப் போய்விட்டார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சம்பத், “வன்கொடுமைக்கு எதிராகப் புகார் கொடுத்தால் மேல்சாதியினர் உடனே ‘கௌன்டர் பெட்டிசன்’ (எதிர் மனு) போடுகின்றனர். “கௌன்டர்” என்று நான் குறிப்பிடுவதை தயவு செய்து கோவைப் பகுதி தோழர்கள் தவறாக எடுத்துக் கோபித்துக் கொள்ளவேண்டாம்” என்று இன்னமும் கவுண்டர்களாக இருக்கும் கோவைத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

மாநாட்டின் மைய நோக்கங்களாக மதவெறி எதிர்ப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, பெண் விடுதலை, தலித் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என முன்னர் அறிவித்திருந்தனர்.  இன்றைக்கு உழைக்கும் மக்களை ஒன்றுபடவிடாமல் முனைப்பாக இயங்கி வருவது இந்துவெறிப் பாசிசம்தான் என்பதை வரையறுக்காமல், யார் மனமும் நோகாதபடி மொன்னையாக மதவெறி எதிர்ப்பு என முதலில் சொன்னவர்கள், சென்னைபோரூரில் இந்து முன்னணியினரிடம் அடிவாங்கி வந்தது நினைவுக்கு வந்ததாலோ என்னவோ, அதனையும் மாற்றி “வேற்றுமையில் ஒற்றுமை” என்று சொல் லி விட்டார்கள். கூட்டத்தில் பேசிய ஓர் எழுத்தாளரும் “இந்தியாவில் சமீபகாலமாக மதவெறியினால் மாண்டு போகிறவர்கள் அதிகமாகி விட்டனர்” என்று வருத்தப்பட்டார்.

எந்த மதவெறி என்று சொல்லவும் கூச்சம். இறுதியாக மதவெறியை ஒழிக்க காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஐ, “மதவெறி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக”க் கடைப்பிடிப்பதெனத் தீர்மானித்தனர்.

போகிறபோக்கில் புஷ் மீது காலணிகள் வீசப்பட்டதைப் பற்றிப் பேசிக் கைதட்டல்  வாங்கிக் கொண்டதைத் தவிர,  ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் என எதையும் அறிவிக்கவில்லை. கோக்கோ கோலா விளம்பர நாயகன் அமீர்கானை மாநாட்டுக்கு அழைத்து வருவதாகத்தான் முதலில் திட்டம் இருந்தது என்பதில் இருந்தே, இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும்  பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும்  சேர்த்துக்குவோம்;  இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக  உள்ளது .

த.மு.எ.ச. செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் ‘ஆண்களுக்கான சமையல் குறிப்பு’ நூலில் ‘மிச்சம் மீதியாகும் எல்லாக் காய்கறிகளையும் பருப்பையும் அரிசியையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கும் கதம்பக் கூட்டுச் சோறு’ பற்றிய சமையல் குறிப்பு ஒன்று உண்டு. அதே சமையல் குறிப்பை மாநாட்டுக்கும் பொருத்திப் பார்த்து   கலவையான கொள்கைக் கூட்டு ஒன்றைச் சமைத்திருக்கிறார்கள். பத்தியம் கருதியோ என்னவோ மார்க்சியப் பார்வையை அஞ்சறைப் பெட்டிக்குள் மறக்காமல் ஒளித்து வைத்து விட்டார்கள்.

இந்த மாநாட்டில் த.மு.எ.ச. என்ற பெயரை, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம்” என மாற்றி இருக்கின்றனர். இதை மனதில்வைத்துத்தான் பொன்னீலன் தனது வாழ்த்துரையில் ‘நாம் ரொம்பப் பெரியதாய் வளர்ந்திருக்கிறோம்’ என்று மெய்சிலிர்த்தாரோ!

இலட்சக்கணக்கில் செலவு செய்து கோடம்பாக்கத்தில் கூட்டப்பட்ட மாநாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை  இப்போது சினிமாக் கலைஞர்கள் பலரும், இயக்குநர்கள் பலரும் நம்மோடு வெகு நெருக்கமாயிருப்பதைப் பார்க்கும்போது நாம் எடுத்த முடிவு சரியானதுதான் என்பது உண்மையாகி இருக்கிறது’ எனத் தமிழ்ச்செல்வனும், ‘கோடம்பாக்கத்துக் கலைஞர்கள் பெருவாரியாக எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்’ என நன்மாறனும் இறுதி நாளில் குறிப்பிட்டனர். மேலும், அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டு விட்டதால், புரட்சிக்கு கோடம்பாக்கத்தில் ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கப் போகிறார்கள். இனிவரும் கலை இரவுகளில் விஜய் முதல் நமீதா வரை பலரும் பங்கேற்கலாம். இனி, அடுத்த கலை இரவு எங்கே இருக்கும்?

ஏவிஎம் ஸ்டுடியோவிலா?

இருந்தாலும், த.மு.எ.க.ச.வின் இந்தத் திட்டம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போலத்தான். 35 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வேலையை வெகு எளிதாகச் செய்துவிட்டார்  போலி கம்யூனிசத் தலைவரான கல்யாணசுந்தரம். முன்னணி நடிகரான எம்.ஜி.ஆரை வளைத்துப் போட்டு, அவரையே புரட்சித் தலைவராக்கி விட்டார்.  இதற்காக அவர்   மாநாடோ, கலை இரவோ நடத்தவில்லை.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2009

 

Read Full Post »

« Newer Posts - Older Posts »