இந்திய அரசு ஈழத்தில் சிங்கள பாசிஸ்டுகளுக்கு அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் களத்திலேயே இறங்கி உதவிகளை செய்துவருகிறது என்பதை விட அங்கு ஒரு பயங்கரவாதப் போரை நேரடியாக நின்று நடத்தி வருகிறது என்பது தான் உண்மை.
இந்திய அரசின் இந்த பயங்கரவாத போரை நியாயப்படுத்தியும் அதற்கு விளக்கமளித்தும் இந்திய தமிழக பார்ப்பன கும்பல் இணைய தளங்களில் பார்ப்பன கொழுப்பு கலந்த மகிழ்வுடன் எழுதி வருகிறது.

சந்திப்பை அம்பலமாக்கும் பின்ணூட்டங்கள்
//. இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் – மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.//உங்களுக்கு எப்போது லங்க ரத்னா விருது கொடுத்தார்கள் சந்திப்பு. அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணி இருந்தும். இப்போதுதான் புரிகிறது கூட்டுண்ணியாகி விட்டீர்கள் என்று.ஈழத்தமிழரின் அரசியல், தத்துவம்,சுயௌரிமை எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்து விட்டு எப்படி உங்களை இன்னமும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்க சிவப்புச்சட்டையில் நந்திகிராம ரத்தமும் கலந்திருப்பதை மறந்து விட்டீர்கள் போலும். நீர்த்துப் போன ஒரு சிந்தனையாளனாகாத்தான் உங்களை காணமுடிகிறது. தனிப்ப்பட்ட முறையில் அதற்காக வருத்தப்படவும் செய்கிறேன்.
5:22 PM
விடுதலை said…
இதுவரை ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்கொலை செய்துகொண்டவர்கள் சாதித்தது என்ன? புரட்சி பற்றிய அறியாமையும் விடுதலைக்கான பாதையின் தெளிவின்மையும் எம் தமிழ் இன சகோதரர்களின் உயிரை அநியாயமாக காவு வாங்கி இருக்கிறது. என்பதே என்கருத்து முத்துகுமரனின் மரணம் தோல்வி அடைந்த சித்தாந்தத்தின் பின்னடைவு.
5:28 PM
விடுதலை(கள்) தெளிவாகவே இருக்கிறார்கள்.அவர்களின் கட்சிஅப்படி.பாலஸ்தீனம் என்றால்வாய் திறந்து வசனம் பேசும்,இஸ்ரேலுடன் உறவு கூடாதுஎன்று சொல்லும்.ஈழம் என்றால்நமக்கு உபதேசம் செய்யும், போதிக்கும். மகிந்த பேசாமல் சிபிஐ(எம்)க் கட்சிக்கே ஒட்டுமொத்தமாகலங்காரத்னா விருது தரலாம்.
5:50 PM
iyya eelam engalin uurimai,, angeye vazhnthavarkalukku mattume purinthu kolla mudintha unmai,,,thayavu seithu ungal arasiyal pechukkalal engal porattathai avamanapaduthathirkal
9:29 பம்
iyya selvaperumal,, kathinal ketta seithikalai vaithu eelathai patriethaiyavathu sollikondrukathirkal,,pulikalukku aatharavu illai endru umakku epdi therium athai nangal than solla vendum,,, neeraka karpanaiyai vazharthu kollatheerum,,, ootukkaka ethaim pesu ungalukkelam epdi purium engal porattamum, athan valium,,,
9:52 பம்
ஹமாஸ், மற்றும் PLO வன்முறையில் ஈடுபட்டதேயில்லையா, அப்பாவிகளை கொன்றதேயில்லையா?அவர்களை ஏற்கும்,நீங்கள் புலிகளை முற்றிலுமாக நிராகரித்து இலங்கை அரசினை ஆதரிக்கிறீர்கள்.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்,பேரினவாதத்தின் விளைவுகள் இவைகளையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் கிளிப்பிள்ளை போல்கட்சி சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள். உடனடியாக போர்நிறுத்தம் தேவை.புலிகளுடானபோரில் பாதிக்கப்படுவது அப்பாவிபொதுமக்கள்.48 மணி நேர நிறுத்தம்என்பது கண் துடைப்பு.தமிழருக்குஅங்கு பாதுகாப்பில்லை.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களால்அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். கிழக்கிலும் அதேநிலைதான்.கருணாவின் அரசு பொம்மை அரசு.அது இலங்கை அரசின்கைக்கூலி அரசு. இதையெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா?. தீக்கதிர் தவிரவேறு எதையும் படிப்பதில்லையா.உங்கள் கட்சியின் Peoples Democracyஏட்டிற்கு இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையை விட பாலஸ்தீனம்தான்முக்கியம். உண்மை எதுவாக இருந்தாலும் புலிகள் ஒழியட்டும்,தமிழர்கள்இருந்தால் என்ன செத்தால் என்னஎன்ற நிலையை உங்கள் கட்சிஎடுத்து விட்டது.சிபிஐ பரவாயில்லை.காங்கிரஸ்,சிபிஐ(எம்) இரண்டும்இதில் ஒன்றாக உள்ளன.
10:25 am
பார்ப்பன மாலனை அம்பலமாக்கும் பின்ணூட்டங்கள்
ஒரு பத்திரிகையாளரான உங்களுக்குப் பத்திரிகைகள் ஏன் இலங்கை அரசால் அனுமதிக்கப் படுவதில்லை என்று தோன்றவில்லை. பத்திரிகையாளரான உங்களுக்கு எத்தனை ஊடகத்துறையினர் இதுவரை அரசாங்கத்தால் கொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்றெல்லாம் தெரியாதா? தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வேண்டாம், நீங்களெல்லாம் அவர்களுக்காகக் கரிசனப்பட்டால் உங்கள் நடுனிலை–லிபரல் புனித பிம்பம் கலைந்துவிடும். அரசு நடத்திய சிங்களப் பத்திரிகையாளரான லசாந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைப் பற்றி உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களின் மத்தியிலும் கண்டனம் எழுந்ததே. http://www.thesundayleader.lk/20090104/editorial-.htmhttp://www.thesundayleader.lk/20090111/editorial-.htmபத்திரிகையாளனான உங்களிடமிருந்து இதுவரை ஏதாவது வந்துள்ளதா? ஏன் இந்த இடுகையில் கூட உங்கள் லிபரல் வேசத்துக்காகக் கூட அதைப் பற்றி முணுமுணுக்கவில்லை?ஏனெனின் பத்திரிகையாளன் வேலை, லிபரல் வேசம், தமிழர்களின் மேலான பாசாங்கு கரிசனம், இலங்கை அரசைப் பற்றிய இலேசான விமர்சனம் என எத்தனை நயவஞ்சக நாடகங்களைப் போட்டாலும் உங்களைப் போன்றவர்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் பார்ப்பனிய அரசியல் தமிழர்களின் மத்தியில் என்றாவது தெளிவு ஏற்படும் காலம் வரத்தான் செய்யும். அதுவரை தமிழனை இந்தியனாக்குவதற்கு செங்கல்லைப் போட்டுத் தேய்த்துக் கொண்டேயிருங்கள்!//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய பார்ப்பனிய நலன் கோலோச்சும் இந்தியா வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் பிடிவாதத்துக்கும் கூட வேறுபாடு இல்லைதான்.நன்றி – சொ.சங்கரபாண்டி
//நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.//மிக உண்மை.ஆனால் ஊடகங்கள் ஒரு சாரார் மிகப்பிடிவாதமாக கேவலமான செய்திகளை வெளியிடுவதையும் (Hindu.Times of Inda, தினமலர்..) அதை எதிர்த்தோ (வியாபார நோக்குடனும்) பிற பத்திரிக்கைகள் உணர்ச்சிவசப்பட்டு அதை அனுகுவதும் தான் கார்ணம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.//அதே வரலா்ற்றை சற்றே தெளிவாக ராஜீவ் கா்ந்தி என்ன செய்தார்.IPKF ப்ற்றியும் திலீபன் பற்றியும் இந்திய இராணுவம் EPRLF க்கு ஆயுதங்கள் கொடுத்ததையும் பிராபக்ர்னை அமைதிப்பேச்சுக்கு வரும் பொழுது சுட்டுக்கொல்ல சொன்னதை்யும் இன்ன பிற//1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)//இதென்ன வாதம்.இங்குஇருக்கும் 7 கோடித்தமிழர்கள் இந்தியா தன் நாட்டுமக்களாக நினைத்திருந்தால் அவர்கள் உணர்வுகளை மதி்த்து அவர்களின் இனத்தை காப்பதற்கு துனை போய் இருக்கவேண்டுமே தவிர பிற நாடுகளுடன் ்போட்டி போட்டி தமிழர்களை கொல்வதல்ல.//கோபம் திரு்ம்பினால?!!!//இந்திய தென் கிழக்கு ஆசியாவின் வல்லரசு.இலங்கை சுண்டகாய் நாடு.எ்ம் நாடு எம் உணர்வுகளுக்கு எதி்ராக செயல்படுவதை ஏற்க முடியாது.இவ்ளவும் பயம் இருப்பவர்களாக இருந்தால் காஷ்மீரை பிடிவாதமாக விட்மாட்டோம் என்று இவ்்ளோ பணத்தை செலவிட வேண்டிய அவசியமென்ன..//2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது//இப்பொழு்தும் அவை உதவிக்கொண்டுதான் இருக்கின்றன.இப்பொழுதும் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடம் ஆயுதம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.இந்தி்யா உதவுவதால் இலங்கை பிற நாடுகளின் (நம் பகை நாடுகளின்) உதவிக்ள் பெருவதை நிறுத்தியிருக்கவேண்டும்.//3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின ‘சைக்கிள் கேப்‘பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.//comedy panna vendam.ஏற்கனவே மாதம் 3 முறை கப்பல் கப்பலாக ஆயுதம் ்போய்க்கொண்டுதான் இருக்கின்றன//இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.//இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். so at any cast , pakisthan helping srilanka. srilanka accepting its help. ///இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம்.///யாருடைய தற்கொலைக்கு அன்பரே…//ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.//பைத்தியகாரத்தணம். ஆயுதம் கொடுப்போம் யுத்தம் நி்ற்காது. ம்க்கள் மட்டும் உயிருடன் safe zone வருவார்கள். அவர்களை கற்்பழித்து கொல்வோம்..இப்படி நடுநிலை என்ற பெ்யரில் உ்ண்மைக்கு புறம்பாக செ்ய்திகளை பரப்புவதும் சில முத்துக்குமார்்களை உருவாக்கும் நண்பரே.
//அறிந்தோ அறியாமலோ எந்தவொரு பிரச்சினையையும் மிகை உணர்ச்சியோடு அணுகவே தமிழர்கள் கற்றுத்தரப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.//ஆக, என்ன நடந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாக இருக்க தமிழர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்கிறீர்களா? கற்பனைப் புனைவுலகத்தில் மிதப்பவர்கள் நிஜ உலகத்தில் நடப்பவற்றைக் குறித்து அக்கறையில்லாதிருப்பது ஆச்சரியேதுமில்லை.//ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் இப்பதிவு போன்று தெளிவாக ஒரு பிரச்சினையை அணுகும் சிந்தனையை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களின் முன் வைத்திருந்தால் முத்துக்குமார் போன்ற அப்பாவிகளின் உயிர் பலியாகாமலிருந்திருக்கும்.//ஆமாம், மாலன் இந்த முப்பரிமாணக் கட்டுரையை முன்னாடியே வரைந்து முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தால் அவர் தீக்குளித்திருக்கமாட்டார். ஆகவே, இந்த உயிர்காக்கும் கட்டுரையை நகலெடுத்து ஒவ்வொரு தமிழ் இளைஞரிடமும் கொடுக்கும் சேவையை நீங்கள் ஏற்றுச் செய்யலாம்.
நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பங்களாதேஷை மட்டும் எப்படி பிரிக்கஇந்தியா ஒப்புக்கொண்டு போர் தொடுத்தது.நாடு என்றால் எல்லாமே நாடுதான். தமிழனுக்கு எதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோள்.மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கையைகண்டிக்கக்கூட வக்கிலாத இந்தியாவா இலங்கையில் தமிழனுக்கு நீதி கிடைக்கச்செய்யப்போகிறார்கள்.ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம். நாளைதமிழனும் தனித்தமிழ்நாடு கேட்ப்பானோ என்ற அச்சம்!
4:09 பம்
“ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம்.”மிகச்சரி.. உலகில் தமிழ்ன் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. அது உருவாகிவிட கூடாது என்ற நல்லெண்ணம் நிறைய இந்தியர்களுக்கும் உண்டு..
விடுதலைப் புலிகளை தனது செல்லக் குழந்தையாக இந்தியா–இந்திரா–ரா வளர்த்து ஏன்? உண்மையில் இந்தியா தனது வலிமையை ராஜபக்ஷேவின் பாகிஸ்தான் புச்சாண்டிக்கு பயந்து சுருங்கி அடகு வைத்துள்ளதுதான் உண்மை. அதனால்தான் கூப்பிட்டவுடன் ஓடிப்போகிறது இந்திய அரசு.சரி இந்த போர் செய்துதான் இலங்கை அரசு இந்தியாவின் “எதிரி“நாடுகள் படைத்தளம் அமைக்க அனுமதிக்க வேண்டுமா? உண்மையில் விடுதலைப் புலிகளோ அல்லது ஈழப்பிரச்சனையோதான் இத்தனைநாள் அங்கு படைத்தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதுதான் உண்மை. இந்தியா பற்றிய இப்பதிவு உருவாக்கும் சித்திரம் உலகிலேயே அப்பிராணியான ஜனநாய காவல்நாடு என்பதான தோற்றமே. விடுதலைப்புலிகள் இந்தியா உருவாக்கிய எல்லைத்தாண்டிய பயங்கரவாதம்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? இப்படி புலிகளை வளர்க்க ஆலொசனை தந்த அதே அறிஞர்கள்தான் இன்று புலிகளை ஒழிக்க ஆலோசனை தருகிறார்கள் என்பதுதான் உண்மை. நாராயணன் மற்றும் சிவசங்கரமேனனின் வழிகாட்டுதலில் உண்மையில் இந்திய நலன் இல்லை. சாதிய–இன் துவேஷமே உள்ளது. அதன் ஒரு விளைவுதான் ஈழத்தின் இந்த போர்.தனது பிராந்திய நலனுக்காக புலிகளை வளர்த்துவிட்டு, இன்று தேவை இல்லை என்றவுடன் அமேரிக்காவின் தற்போதைய முஜாகிதின் மற்றும் பின்லாடன் உறவு போன்ற ஒரு எதிர்நிலையை எடுத்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த இலங்கை ஆதரவு ராஜதந்திரம் அல்ல. சரி நாளை விடுதலைப்புலிகள் ஒழிந்து அங்கு ஒரு “ஜனநாயகக் குடியரசு“ வந்தால் உடனே இந்தியாவின் எடுபிடி நாடாக இலங்கை மாறிவிடும் என்பதற்கும் அல்லது “நட்பு“ நாடாக மாறிவிடும் என்பதற்கும் அல்லது மற்ற “எதிரி“ நாடகளினது படைத்தளம் அமைக்காது என்பதற்கும் என்ன உத்திரவாதம்? உண்மையில் இந்தியாவின் ஒரு முதிர்ச்சியற்ற “ராசதந்திரமே“ இது. நண்பர்களைவிட்டு எதிரிகளை வளர்ப்பது. இந்தியாவின் நிலை அதனை வழிநடத்தும் நபர்களின் தமிழ்பேசும் மக்கள் மீது உள்ள தேசிய இன சாதிய துவேஷத்தின் வெளிப்பாடே. மற்றபடி இந்திய அரசு நல்லக் குழந்தைதான்.??? புலிகள் போன்ற கள்ளக் குழுந்தைகளை பெற்றெடுக்கும் நல்ல அரசுதான்?
முதலில் உளறுவதை நிறுத்தவும். ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் முதல் 4 அம்சங்கள் இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை.திருகோணமலையில் உள்ள எண்ணைக் கிடங்குகளைத் தரும்படி தான் இருந்தது.ஒரு இந்தியனாக வெட்கப்பட வேண்டும்.இறக்கின்ற இனத்தைக் காப்பாறுவதாககூறி இலங்கையிடம் கைக்கூலி வாங்கிய தலைவர் ராஜீவ்.இன்று திருகோணமலை எண்ணைக்கிடங்குகள் அனைத்தும், இந்தியாவில் கையில் உள்ளது.ஒரு குடிமகனாக வெட்கம் வரவில்லையா? முதலில் வெட்கப்படக் கற்றுக்கொள்ளவும்.பரந்த நிலப்பரப்பும் 100 கோடி மக்கள் என்பது ஒரு பெரிய தோற்றத்தைக் கொடுக்கலாம்.ஆனால் பெரிய கௌரவத்தைக் கொடுக்காது.முதலில் இந்தியாவின் தலைமையை ஒரு இந்தியன் தலைமை ஏற்க உங்கள் பேனாவைப் பயன்படுத்துங்கள்.அடிக்காதே என்று கேட்கின்ற ஈழத் தமிழனுக்கு அடிக்கும் உன் தேசம் பாகிஸ்தானுக்கு மாத்திரம் அடங்கி ஏன் வாலையாட்டுது?. முத்துகுமாரனின் மரணம் திரும்பவும் நடைபெறக்கூடாது. மாற்றுக் கருத்தில்லை. அவன் ஒரு சோரம்போகாத எழுத்தாளன். லங்காரத்னாவும் இலங்கைப் பொற்கிளியும் விரும்பாத ஒரு பத்திரிகையாளன்.மாலன் அவர்களே! என்றாவது ஈழ மக்களின் வாழ்க்கையை நேரில் வந்து பார்த்ததுண்டா?இந்தியச் செய்திஊடகங்களுக்கு ஊடாக ஈழத் தமிழர் நெருக்கடியைப் பார்க்காதீர்கள்.ஈழத் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உடன்பாடு வேண்டும் என்றால் அதெப்படி ராஜிவும் ஜெயவர்த்தனாவும் ஒப்பம் போட முடியும்? ஈழத் தமிழ்ர்களுக்கு கைநாட்டும் போடத் தெரியாதவர்களா?ஒரு ஈழத் தமிழன்
7:33 PM
மாலன் நீங்கள் கருத்து சொல்லவதை நிறுத்தி விட்டு ஈழதமிழர் மத்தியில் ஏதிலிகளாக சென்று அயல்நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழர்களிடமும் கேளுங்கள். யார் அவர்களின் பிரதிநிதி? இந்திய தலையிட வேண்டுமா வேண்டாமா என்று?தன் ஆதாயத்திற்காக போராளிகுழுவை தோற்றுவித்ததே இந்திய தானே.
9:38 பம்
ஒரு விசயத்துக்காக உங்களைப் பாராட்ட வேண்டும். உங்கள் கருத்தை வெளிப்படையாக உங்கள் பெயரில் சொல்லுகிறீர்கள். சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் இதைச் செய்கிறார்கள். பல ஆண்டுகளாக முகமூடி அணிந்து எழுதி வரும் நரிகளைப் புறக்கணிப்பதே நல்லது. உங்கள் வெளிப்படையான கருத்துகளைப் புறக்கணிப்பதை விட அதே போல் வெளிப்படையாக எதிர்கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.இப்பொழுது வாதத்துக்கு வருவோம்.//அவகாசம் கிடைத்து எழுத உட்காருவதற்குள் அந்தச் செய்தி நம்மைக் கடந்து போகும். அப்படி எழுதத் தவறியவை பல. …ஒருவர் ஒரு செயலைச் செய்யாதது அவரது நிலையை விளக்குவதாக ஆகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? //ஒத்துக்கொள்கிறேன். பல நேரங்களில் நினைப்பதைச் செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால் அந்த விசயமே நம்முடைய தொழிலாக, வாழ்வாதாரமாக இருக்கும் பொழுது மனதுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும் பொழுது இலேசாகவாவது கோடிட்டுக் காட்டத் தோன்றும். இந்த இடுகையில் இலங்கையில் நடக்கும் போரையும் வன்முறைகளையும் பேசுகிறீர்கள். அது எப்படி புலிகளின் வன்முறைகள் பற்றி எழுதத் தோன்றும் உங்களுக்கு, உங்கள் தொழிலைச் செய்யும் நிராயுதபாணியானபத்திரிகைத் தலைமையாசிரியரை அரசாங்கமே போட்டுத்தள்ளியதைக் குறிப்பிடத் தோன்றவில்லை? அதுவும் அப்பத்திரிகையாசிரியன் தான் கொல்லப் படக்கூடுமென்று உறுதியாக நம்பி உருக்கமான இன்னொரு ஆசிரியர் பத்தியை எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறான். உலகெங்கும் பிற பத்திரிகையாளர்கள் அப்பத்தியை மறுமதிப்புச் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்குப் போகிற போக்கில் கூட அதைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு உங்களுக்குள் பாரபட்சமான புலியெதிர்ப்பு இருக்கிறது. சில அனாமத்துகள் பதிலுக்கு என்னைப் பார்த்து கேட்கின்றன, நான் ஏன் புலி வன்முறையை விமர்சிப்பதில்லையென்று. நான் நடுநிலை நாடகமெல்லாம் போடவில்லை. ஈழத்தமிழர்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகள் சீரழிக்கப் பட்ட ஒரு அவல வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களென்றால் அதற்குக் காரணமாகக் கையைச் சுட்ட வேண்டியது முதலில் இலங்கையைப் பார்த்து. அடுத்து இந்தியாவைப் பார்த்து. மூன்றாவதுதான் புலிகளைப் பார்த்துக் கையைச் சுட்டுவேன். ஏன் ஈழத்திலும், உலகெங்கும் சிதறி வாழும் தமிழரிடம் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டியதுதானே! நான் புலி ஆதரவாளனென்றால் இருந்துவிட்டுப் போகட்டும். //பத்திரிகைகளுக்கான கருத்துரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பதை உலகறியும். //சரி, ஒத்துக் கொள்வோம். ஜனநாயக அரசு, இறையாண்மையென்று பீற்றிக் கொள்ளும் ஒரு அரசும், அதையெதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பும் பத்திரிகையாளர்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள், பரஸ்பரம் தலைவர்களைக் கொலை செய்கிறார்கள் என்கிற பொழுது நீங்கள் எப்படி ஒரு பக்கத்தில் அரசை மட்டும் ஆதரிக்க முடியும், இராணுவ உதவி அளிக்க முடியும். எதிர்த்தரப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படமுடியும்? இதிலிருந்து தெரிகிறது உங்களது பிரச்னை புலியில்லை, தமிழர்கள் உரிமைப் போரில் வென்று, மனிதர்களாக வாழக் கூடாது என்று உள்ளூர நினைத்து வஞ்சகமாகக் காய்களை நகர்த்துகிற நீங்கள் தமிழர்களின் எதிரிகளென்று.//எல்லா உற்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படுமானால் அதை இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என நம்புவோம்//சபாஷ், இப்பொழுது உங்களுக்கு மலையகத்தமிழர் என்று அழைக்கப் ப்படுகிற இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி நினைவு படுத்துகிறேன். ஏனென்றால் மற்ற எல்லா வரலாற்றிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் அம்பிகளுக்கு தமிழர் வரலாறு என்றால் மட்டும் புத்தி மந்தமாகி விடுமே. 1948ல் இந்திய வம்சாவளித் தமிழர்களுடைய குடியுரிமையை இலங்கை பறித்தது. இப்பிரச்னையைத் தீர்க்க 1964ல் இந்தியா இலங்கையுடன் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தைப் போட்டது. அதன்படி மொத்த இந்தியத்தமிழர் 975,000 பேரில், இந்தியா 525,000 பேரையும், இலங்கை 300,000 பேரையும் பிரித்துக் கொண்டு மீதி 150,000 பேரை பின்னால் பார்த்துக் கொள்ளலாமென்று விட்டனர். இந்தியா தன் பங்குக்கு 525,000 பேரை ஏற்றுக்கொண்டது. 1974 ல் இந்திரா இன்னொரு ஒப்பந்தம் போட்டு மீதமிருந்தவர்களிலும் பாதியை (75000)பேரை ஏற்றுக் கொண்டது. இந்தியா ஏற்றுக் கொண்ட தமிழர்களையெல்லாம் ஆடுமாடுகள் போல் பங்கு போட்டு இந்தியாவின் பல மானிலங்களில் விசிறி அடித்தது இந்தியா என்பது ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய பக்கத்தை அமல்படுத்தியது என்று சொல்லலாம். இலங்கை மீதமிருந்த தமிழர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதாகச் சட்டமெல்லாம் இயற்றி அவற்றைக் குப்பையில் போட்டு இன்று வரை அவர்கள் நாடற்றவர்கள் என்ற உண்மை இந்திய அம்னீசியா மூளைகளுக்குத் தெரியுமா? இதுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமைக்கு புலிகள் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்வது போல். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தம். இந்தியத் தமிழர்கள் எந்த வன்முறையிலும் இன்றுவரை ஈடுபடவில்லை. அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.பின் எந்த இலட்சணத்தில் *தமிழர் விரோதி* இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என்று நம்பச்சொல்லுகிறீர்கள்? அப்போதும் உங்களைப் போன்ற பார்ப்பனியப் பாசாங்குகள் இதே புலியின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வீர்கள். சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவி வேசதாரிகள் மிகை உணர்ச்சியில்லாமல் பல்வித பரிமாணங்களுடன் அணுகுவார்கள். இருபதைந்து ஆண்டுகளாக அவர்களுடைய அக்கா தங்கைகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணரப் படுவார்கள் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்கள் மிகை உணர்ச்சிகளைக் காட்டாமல் பல பரிமாணங்களைத் தேடி அலைவார்களோ என்னவோ.யாரை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?நன்றி – சொ.சங்கரபாண்டி
12:37 பம்
மாலன்வலைப்பதிவுகளில் எதுவும் எழுதுவதில்லை என்ற மௌனத்தை உங்கள் பதிவுக்காகக் கலைக்கவேண்டியிருக்கிறது.இலங்கை இந்திய அரசாங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து ஈழத்தில் தமிழ் மக்களைக் கொல்வதை போர் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை பாம்பும் சாகவேணும் தடியும் உடையக் கூடாது என்று பார்த்தால் முடியாது என்றவாறே அனுமன் பாக்கு நீரிணையைத் தாண்டிய மாதிரி தாண்டிவிடும் நீங்கள் விடுதலைப்புலிகள் செய்பவற்றை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்கவில்லையே என அங்கலாய்க்கிறீர்கள் போராட்டம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்ற நியாயம் தானே அவர்களுக்கும்.பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கை விமானிகள் விமானத்தை ஓட்டி இலக்குத் தவறாமல் குண்டு வீசவில்லை.இந்தியாவில் பயிற்சி பெற்ற இந்திய இராணுவத்தின் விமானப் படையினர் தாம் இலக்குத் தவறாமல் அகதிகள் மீது குண்டு வீசுகிறார்கள்.அது நீங்கள் சொல்கிற முத்துக்குமாருக்கும் தெரியும் என்பதைத் தான் அவர் கடிதமே சொல்கிறதே.சரி நீங்கள் சொல்கிறபடி இந்தியா உதவவில்லையாயின் மற்ற நாடுகள் இலங்கையைத் தம்பக்கம் இழுத்துவிடும் ஆகவே இந்தியா உதவி செய்கிறது.நியாயம் தான் ஆனால் இப்போதும் மற்ற நாடுகள் உதவி செய்கின்றனவே இந்தியா செய்வதை விட அதிகமாகச் செய்கின்றனவே.சிவசங்கர் மேனன் சிறீலங்கா போய் கெஞ்சி மன்றாடி விழுந்து கும்பிட்டு நாங்களும் ரௌடி தானப்பு என்று சொல்லிவிட்டு வந்தால் பாகிஸ்தான் சொடக்குப் போட்டு கோத்தபாயவைக் கூப்பிடுகிறது அவரும் போய் நானும் நீங்களும் எப்பவும் ஒட்டு இந்தியாவைச் சும்மா எடுப்புக்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வருகிறார்.இப்போது சொல்லுங்கள் யார் பெரிய ரௌடிபோர் முடிந்ததும் சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு குண்டி காட்டப் போகிறதே அப்போது இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது குண்டியைக் காட்டினாலும் கழுவிவிட்டாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறதா?அப்போதும் நீங்கள் இந்தியாவுக்கு வேறு வழியில்லை மற்ற நாடுகள் கழுவி விடுமுன் நாங்கள் கழுவி விட்டால் தான் இலங்கையிடம் நல்ல பெயர் கேட்கலாம் என்று நியாயப் படுத்துவீர்களா?பெருமையாக இருக்கிறது என்னதான் இலங்கை அரசு தமிழனை ஒறுத்தாலும் இத்தனை நாடுகள் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலையில் அல்லவா ஒவ்வொரு இல்ங்கைக் குடிமகனும் இருக்கிறான்.அப்படிப் பார்த்தால் நாம் தான் தெற்காசிய வல்லரசு.யாரங்கே சோனியாவை ஒரு பீட்சா கொண்டுவரச் சொல்லு உடனடியாக வரவேணும் இல்லாவிட்டால் பாகிஸ்தானிலிருந்து ஓடர் பண்ணிவிடுவேன்
1:20 am
உங்கள் பதில்களுக்கு நன்றி.நீங்கள் ஒத்துகொள்கிற கருத்துக்களை மட்டும் இங்கு மற்றவர்களின் பார்வைக்குத் தொகுத்துத் தருகிறேன்.1.மூர்க்கத்தனமான கண்மூடித்தனமான வன்முறைகளிலும், கொலைகளிலும் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் வேறுபாடில்லை.2.மூன்று தரப்பும் – இந்தியா உள்பட – பெரும்பிழைகள் செய்திருக்கின்றன.3.வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அரசும், புலிகளும் நம்பத்தகுந்தவர்களல்ல. இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியதாக வரலாறில்லை. புலிகள் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிடினும் நழுவி விடுகின்றனர்.4.சுண்டைக்காய் நாடாக இருந்தாலும் இலங்கையை வல்லரசான இந்தியா ஒப்பந்தங்களை நிறைவேற்றுமாறு நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் வந்துவிடுவார்கள். அதனால் இலங்கையைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் (options) இந்தியாவுக்கு இல்லை. ஆனால் புலிகளை மட்டும் தமிழர்களின் முதுகெலும்பை முறித்தாவது இந்தியா நிர்ப்பந்திக்க முடியும்.5.சுண்டக்காய் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்ய – அது ஜேவிபி எழுச்சியை ஒடுக்குவதாக இருந்தாலும், புலிகளை அழிப்பதாக இருந்தாலும் – வல்லரசான இந்தியா ஒடோடிச் செல்ல வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.6.தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள் வந்து இலங்கையின் கடற்படையினர் தாக்கினாலும் இந்தியா பொறுமையுடன் கையாள வேண்டும்.இப்பொழுது மூன்று குற்றவாளிகள் – இலங்கை, இந்தியா, புலிகள் – இருக்கின்றனர். இரண்டாவது குற்றவாளிக்கு முதல் குற்றவாளியை ஆதரிப்பதை விட்டால் வேறு வாய்ப்பில்லை. எனவே முதல் இரண்டு குற்றவாளிகளும் இணைந்தே செயல்படுகின்றனர். நீங்கள் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை ஆதரிக்கிறீர்கள், நிரந்தரத் தீர்வாகும் என்கிறீர்கள், காரணம் ஒன்றேயொன்றுதான் – நீங்கள் இரண்டாம் குற்றவாளியின் விசுவாசக் குடிமகன். நான் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை எதிர்க்கிறேன், காரணங்கள் இரண்டு – (1) முதல் குற்றவாளியின் ஒடுக்கு முறையை எதிர்த்து உருவானதுதான் இரண்டாவது குற்றவாளி. (2) ஆரம்பத்தில் முதல் குற்றவாளியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, பின்னால் இந்த மூன்று குற்றவாளிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு இருபத்தைந்தாண்டுகளாக சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து வரும் அப்பாவித் தமிழர்களில் பெரும்பான்மையினர் மூன்றாம் குற்றவாளிகளான புலிகளை தங்களது பாதுகாப்புக்காக ஆதரிக்கின்றனர்.உங்கள் நியாயம் உங்களுக்கு, என்னுடைய நியாயம் எனக்கு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இலக்கிய மேதாவிகளான சுரேஷ் கண்ணன் போன்றவர்களுக்கு என்னுடைய பார்வை ஒற்றைப் பரிமாணமாகவும், உணர்ச்சிவயப்பட்டதாகவும் தோன்றலாம். உணர்ச்சிவயப்படுவதற்குக் கூடக் கொஞ்சம் இரக்க உணர்வு வேண்டும். மனித நேயம் வேண்டும். இதற்கு மேல் இங்கு என் வாதத்தைத் தொடர நேரமில்லை.நன்றி – சொ.சங்கரபாண்டி
8:15 AM
நான் சில மாதங்களுக்கு முன்புவரை சி.பி.எமின் தீவிர ஆதரவாளர்/உறுப்பினர். அதனாலேயே பல விஷயங்களை (சி.பி.எம் சார்பு ஏடுகளைத் தவிர) தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். கடந்த சில மாதங்களாகத்தான் இது போன்ற இனையதள செய்திகள் முதல் சில தத்துவார்த்த பத்திரிக்கைகள் வரை (புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் உள்பட) படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன். சி.பி.எம்ஐ இப்போதுதான் வெகுஜன நோக்கில் பார்க்க நேர்ந்துள்ளது. மகஇக மற்றபிற புரட்சிகர அமைப்புகளின் தத்துவார்த்த விமர்சனங்களையும் மிகச் சரியென்று ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதனடிப்படையிலேயேதான் சந்திப்பு தரப்பிலிருந்து பதிலெழுதவேண்டிய நான் மற்றும் என்னைப்போன்ற பல தோழர்கள், இன்று அவர்களையே கேள்வி கேட்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் நம்முடைய கேள்விகள் அவருக்கும், அவருக்கு சொல்லிக்கொடுத்து எழுதவைப்பவர்களுக்கும் மிகுந்த ஆத்திரத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இந்த ஆத்திரத்தின் அவலம் தான் அக்கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம்.
சந்திப்பின் மேற்படி கட்டுரையில் பின்னூட்டமிட்டுவிட்டு அவரின் பதிலுக்காக இதுவரை காத்திருக்கிறேன், பதிலில்லை. இப்போது தங்களுடைய இந்தப் பதிவின் மூலமாகத்தான் தெரிகிறது இது அவருடைய வழக்கமான ‘மான் கராத்தே’ பானி என்பது.
பிரபாத் பட்நாயக் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்க பதவி கிடைத்துவிட்ட நன்றிக் கடனுக்காக எழுதுகிறார். நம்ம சந்திப்பு பதவி எதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் எழுதுகிறார், என்பதைவிட இவர்களுடைய செய்திகளில் சாரம் எதுவுமில்லை. நீங்கள் இந்தப் பதிவில் காட்டியுள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சித்தாந்த மேற்கோள்கள் இவர்களுக்கு புரியுமா என்பதே சந்தேகம் தான். பொறுத்திருந்து பார்ப்போம்.
பொருளாதார நிபுணர்.அவர் கட்டுரை
வெளியான EPWவிற்கு உங்கள் பதிலை
எழுதி அனுப்பலாமே.
“பிரபாத் பட்நாயக் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்க பதவி கிடைத்துவிட்ட நன்றிக் கடனுக்காக எழுதுகிறார்.”
இது சரியான வாதமல்ல.ஏனெனில்
பல ஆண்டுகளாக அவர் சிபிஐ
(எம்) கட்சி கருத்துக் கேட்கும்
முக்கியமான அறிவுஜீவிகளில்
ஒருவர்.கொள்கையில் சமரசம் செய்திருந்தால் அதை விட பெரிய, அதிகாரமிக்க பதவிகள் இந்தியாவிலும்/வெளி நாட்டிலும் கிடைத்திருக்கும்.உலகமயமாதல்,
தாராளமயமாக்கல்,உலக வங்கி
போன்றவற்றின் தீவிரமான
விமர்சகர் அவர்.முடிந்தால் அவர்
எழுதியுள்ளவற்றைப் படித்து
புரிந்து கொள்ள முயலுங்கள்.
சிபிஐ(எம்) ஆதரவாளர் என்ற
அளவில் மட்டும் அவரை மதிப்பிடுவது
சரியானதல்ல.
மேலும் அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.
நீங்கள் உங்கள் விமர்சனத்தினை
ஆங்கிலத்தில் எழுதி EPWவிற்கு
அனுப்புங்கள்.
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.//
//அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.//
கருத்துக்களுக்கு நன்றி அனானி(ஏன் அனானியா எழுதுறீங்க So and So? உங்க எழுத்து நடை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் இருக்கும் பொழுது இது தேவையற்றது என்று கருதுகிறேன்),
பிரபாத மார்க்ஸியத்தை அவரது சொந்த புரிதலில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் வி(தி)ரித்துச் செல்லும் முழு உரிமையுடையவர். அதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் லெனினை நிராகரித்து விட்டு இன்னும் சொன்னால் மார்க்ஸ் ஏங்கெல்ஸை நிராகரித்து விட்டு மார்க்ஸியத்தை அவர் எங்கோ கொண்டு செல்வதும் அதை லெனின் மார்க்ஸ் பெயரில் கட்சி நடத்தும் பாசிச CPM பிரசூரிப்பதும் அம்பலப்படுத்தப்பட வேண்டிய பித்தலாட்டங்கள்.
ஆங்கிலத்தில் எழுத அவகாசமில்லை. முயற்சி செய்து பார்க்கலாம்…
அசுரன்
/// இது சரியான வாதமல்ல.ஏனெனில்பல ஆண்டுகளாக அவர் சிபிஐ(எம்) கட்சி கருத்துக் கேட்கும் முக்கியமான அறிவுஜீவிகளில்ஒருவர்.கொள்கையில் சமரசம் செய்திருந்தால் அதை விட பெரிய, அதிகாரமிக்க பதவிகள் இந்தியாவிலும்/வெளி நாட்டிலும் கிடைத்திருக்கும்.
உலகமயமாதல், தாராளமயமாக்கல்,உலக வங்கி போன்றவற்றின் தீவிரமான விமர்சகர் அவர். முடிந்தால் அவர் எழுதியுள்ளவற்றைப் படித்து புரிந்து கொள்ள முயலுங்கள். சிபிஐ(எம்) ஆதரவாளர் என்ற அளவில் மட்டும் அவரை மதிப்பிடுவது சரியானதல்ல.///
அவருடைய சில கட்டுரைகளை சி.பி.எம். ‘சிறு வெளியீடாக’ வெளியிட்டவற்றில் ஒன்றிரண்டு படித்த அனுபவம் எனக்கு உண்டு. அது முற்றிலும் அவர்களின் ‘பொலிட்பீரோ’வின் வழக்கத்திலும் வழக்கமான சப்பைக்கட்டுகளின், பொழிப்புரைகளாகத்தான் இருக்கும். நீங்கள் மிகைப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.
“அவர் கொள்கையில் சமரசம் செய்திருந்தால்…” என்று வேறு சற்று நீட்டுகிறீர்கள். மார்க்சயத்தின் வரையரைப்படி சி.பி.ஐ/எம் இரண்டுமே சமரசவாதிகள் தான் (நமக்குள் நிகழும் கருத்து மோதலின் தோற்றுவாயே அதுதான்). இதிலென்ன பிரபாத் மட்டும் விதிவிலக்கா? அவர் சமரசம் செய்துகொள்ளாதவரானால் உலகமயமாக்கலின் தீவிரமான விமர்சகரானால் மே.வங்கத்தில் அதை ஏற்றுக்கொண்டு செயல் படும் சி.பி.எம் கம்பெனியைத்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.//
இதுதான் பெரிய அயோக்கியத்தனம் என்பது. எந்த வகையில் லெனினின்/மார்க்ஸ்/ஏங்கெல்ஸ் வரையறுப்பிலிருந்து இன்றைய சூழல் நடப்பு அவர்களின் அனுபவங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பது குறித்து இதுவரை ஒரேயொரு தத்துவ வியாக்கியானம் கொடுத்துள்ளனரா இவர்கள்? வெறுமே மார்க்ஸியத்தை திரிக்கும் வேலையை மட்டும் செய்வதற்க்கு இப்படி யாதார்த்தவாத முகமூடி வேறு.
அட அப்படித்தான், இது லெனினிசத்தின் காலகட்டமல்ல(அது முடிந்துவிட்டது என்று)என்று இவர்கள் மார்க்ஸியத்தின் வழியில் கண்டு கொண்டால் ஏன் தங்களை லெனின் பாதையாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். லெனினிசம் காலவதியாகிவிட்டது என்று வெளிப்படையாக சொல்வதை யார் தடுத்தார்கள்?
சரியான தரவுகளுடன் ஆழ்ந்த தத்துவ விளக்கங்களுடனும் விவாதங்கள் நடத்தப்பட்டால் அவற்றை புரிந்து கொண்டு செழுமைப்படுத்திக் கொள்வதில் யாருக்கென்ன சிக்கல்?
அப்படி ஒரு முயற்சியை CPM செய்ததில்லை என்பதும் அது அவர்களின் நோக்கமில்லை என்பதுதான் அவர்களை நேற்றைய போலிகளாகவும் இன்றைய பாசிஸ்டுகளாகவும் கருத அடிபப்டை அமைத்துக் கொடுக்கிறது.
அசுரன்
I hope he may be on medical leave for another one or two months.
சந்திப்பு என்ற CPM ஊழியர் கொஞ்ச நாளுக்கு முன்ன வீராவேசமாக சித்தாந்த விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருந்தார். நாமும் என்னாடாயிது கடந்த சில மாத கேப்பில் மார்க்ஸியத்தை ஓரளவு கற்று தேர்ந்துவிட்டார் போலருக்கு என்ற நம்பிக்கையில் முன்பு போல பொது அறிவின் அடிப்படையிலான கேள்விகளை கேட்பதை விடுத்து மார்க்ஸியத்தின் மூலவர்களையே அவர்களிடம் கேள்வி கேட்க்க இந்த கட்டுரையில் அழைத்து வந்தேன்.
உடனே ஒரு யுக புரட்சி நிகழ்ந்தது சந்திப்பின் தளத்தில். முன்பு நாம் கேள்விகள் கேட்ட பொழுதெல்லாம் இந்த சந்திப்பு எந்த டேப்ரிக்கார்டரை சுவிட்ச் ஆன் செய்வாரோ அதே டேப்ரிக்கார்டரை இந்த முறையும் சுவிட்ச் ஆன் செய்துள்ளார்.
அவருக்கு இரண்டு தகவல்கள்,
ஒன்று வெகுஜன அரங்கில் CPMயைவிட அல்லது வேறெந்த ஓட்டு கட்சிகளையும் விட ஆழமாக வேலை செய்பவர்கள் மக இக வினர் என்ற விசயத்தை நாங்கள் சொல்லவில்லை இணையத்திலேயே இயங்கும் பல்வேறு மாற்று அர்சியல் ஜனநாயக சக்திகள் உங்களிடமே நேரடியாக எமது சார்பில் பேசியுள்ளனர் (பல்வேறு முந்தைய சண்டைகளில்). ஆயினும் அந்த பழைய விவரங்களை புதிதாக இணையத்திற்க்கு வருபவர்கள் வாசிக்க்வா போகிறார்கள் என்ற தைரியத்தில் தனது அதே பழைய பொய்-பித்தலாட்ட, தத்துவ- அரசியல் விமர்சனமற்ற அவதூறு நடைமுறையை சந்திப்பு மீண்டும் முன்னுக்கு கொண்டு வருகிறார். செல்வநாயகியிலிருந்து, மிதக்கும்வெளிவரை இந்த அம்சத்தில் பலரது பழைய பின்னூட்டங்கள்(அவை உங்களது தளம் அல்லது அவர்களது தளத்தில் பிரசூரிக்கப்பட்டவை) என்னால் முன்னுக்கு கொண்டு வர முடியும்.
இரண்டு, உங்களைப் போல ஆளும் வர்க்கத்தின் அங்கீகாரத்தையே ஏதோ பெரிய அங்கீகாரமாக தூக்கிப் பிடித்து பெருமை பேசுவதைத்தான் லெனின் ரொம்ப சுருக்கமாக “அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள்’ என்று அவமானப்படுத்துகிறார். ஏன் சந்திப்பு இந்த பதிவில் கேள்வி கேட்டுள்ளது நான் இல்லையே? லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ்தானே?
அவர்களது ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொல்லலாமே?
உங்களை சித்தாந்த அரசியல் தளத்தில் அம்பலப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து புதிதாக கற்றுக் கொண்டு முன்னுக்கு வருவது என்ற இயங்கியல் உங்களிடம் வெளிவரவில்லை மாறாக மேலும் மேலும் இழிவான, மோசடியான, பித்தலாட்ட நிலைக்கு பின் தங்கிச் செல்லும் போக்கே உங்களிடமிருந்து வெளி வருகிறது. இப்படி பயந்து ஓடுவதும் அதை அவதூறு பேசி மறைப்பதும் பாசிசத்தின் கூறுகளே.
உங்களது அமைப்பை நினைத்து கோபமுற்றாலும், உங்களை நினைத்து முதல் முறையாக பரிதாபப்படுகிறேன் சந்திப்பு 😦
அசுரன்
தலைப்பை பார்த்து விவாதத்திற்கு அழைத்திருப்பீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. “இந்திய சமூக நிலைமைகேற்ப மார்க்சியத்தை பொருத்துகிறோம்” என்று திரிபுவாதத்திற்கு சப்பைக்கட்டு கட்டும் அதே பழைய வாதங்கள். அப்படி என்னதான் பொல்லாத இந்திய சமூக நிலைமை என்பதை எங்களுக்கும்தான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன், ஒவ்வொரு தேசம் தனக்குள்ளே பிற்போக்கான கூறுகளையும், முற்போக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்றார் தோழர்.லெனின், பொருள்முதல்வாதம் எனும் போர்வாளை கொண்டிருக்கும் மார்க்சிய தத்துவம் அந்த சமூகத்தினுடைய போராட்ட மரபிலிருந்து முற்போக்கான கூறிளிருந்து முகிழ்தெழ வேண்டும். இதுதான் உண்மையில் அந்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாக அமையும்., ஆனால் உங்களுடைய மரபுத்தொடர்ச்சியாக இந்த மண்ணில் அமைந்தது எது? உழைக்கும் மக்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து அவர்களை தஸ்யூக்களாக இகழ்ந்த வேத மரபில்லல்லவா மார்க்சியத்தை நீங்கள் இணைத்தீர்கள், இது ஒன்று போதுமே நீங்கள் இந்த மண்ணிலிருந்து எப்படி மார்க்சியத்தை வளத்தெடுத்தீர்கள் என்பதற்கான அத்தாட்சி. வேண்டுமானால் உங்கள் நம்பூதிரி பாடு வேத மரபை விதந்தோதிய விசயங்களை எடுத்துக்காட்டட்டுமா?
உங்கள் மீது எனக்கு பல நாளாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது சந்திப்பு அதாவது நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா அல்லது ஒரு காவல் துறை உளவாளியா? என்பதுதான் அது. ஏன் கேட்கிறேன் என்றால் பொதுவாக தன்னை கம்யூனிஸ்டாக கருதிக் கொள்பவன் யாராயிருந்தாலும் அவன் தத்துவ விவாதத்தில்தான் ஈடுபடுவானேயொழிய நீங்கள் செய்வது போல “நம்மோடு விவாதிப்பவர் ஒருவரே எழுதுகிறாரா, தனித்தனியாக எழுதுகிறாரா, அவரது பெயர் என்ன? ஊர் என்ன? அவருடைய தலைவர்கள் பேரென்ன?” என்றெல்லாம் புலனாய்வு செய்து கொண்டிருக்க மாட்டார், உங்களுடைய அரசியல் ஓட்டாண்டித்தனம்தான் தத்துவ விவாதங்களை தவிர்த்துவிட்டு இது போல உளவு வேலைகளை செய்யச் சொல்கிறது.
//இவர்களது கட்சியின் பெயரை எங்கும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களது கொள்கை இதுதான் என்று வெளிப்படையாக அறிவிப்பதில்லை.//
இதுதான் நீங்கள் கம்யூனிசத்தை புரிந்து வைத்திருக்கும் இலட்சணம் போல, விமர்சணம் என்பது கருத்துக்களின் மீது வைப்பது, ஒருவரின் கருத்துக்கள் தவறாக இருக்கும் பொழுது அதனை சுட்டிக்காட்டி மாற்றிக்கொள்ளும்படி கோருவது ஒருவர் விவாதத்திற்கு அழைத்து உங்களது நடைமுறையில் குறைகளை சுட்டிக்காட்டும் பொழுது, அவரிடம் உங்கள் கட்சி பெயரை சொல்லுங்கள் என்று கேட்பதுதான் நேர்மையா? நாங்கள் ம.க.இ.கவை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படும் பொழுது அந்த அடையாளதோடேயே எங்களோடு உரையாடுவதில் உங்களுக்கென்ன சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா சந்திப்பு. மேலும் எங்கள் கொள்கை என்னவென்று இதுவரை நாங்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை என்று நீங்கள் சொல்வதை தமிழ்மண வாசகர்கள் படித்தால் வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. வேண்டுமானால் உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன், இந்த நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு கூட்டிக்கொடுக்கும் டாடா போன்ற தரகு முதலாளிகளுக்கும் அவர்களது பாதம் நக்கும் பாரளுமன்ற கட்சிகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டி நாடு மறுகாலனியாவதை முறியடிப்பது, ஏக இந்து இந்தியா என்று பேசிக்கொண்டே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்து கொன்டு உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் வைக்க முனையும் ஆயுதம் தாங்கிய பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி முறியடிப்பது, புதிய ஜனநாயக புரட்சி என்னும் இலக்கை அடைவது இதுதான் சந்திப்பு எங்களது கொள்கை, இங்கு நான் சுருக்கமாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன், எங்களது தோழர்கள் இதனை விரிவாக விவரித்து கூட எழுதியிருக்கிறார்கள், உங்களுக்கு எங்கு வசதியோ அங்கேயே நாம் இது பற்றி விவாதிக்கலாம்.
இந்த பின்னூட்டம் அளவுக்கு அதிகமாக நீண்டு விட்டதால் உங்கள் பதிவில் இருக்கும் காமெடியான விசயங்களை இங்கு குறிப்பிட்டு காட்டாமல் தவிர்க்கிறேன், விவாதத்தின் போக்கில் இது போன்ற பல காமெடிகள் உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிருக்கிறது, அப்போது அது பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்.
ஸ்டாலின்
கருத்துக்களுக்கு நன்றீ தோழர் ஸ்டாலின்
//
மேலேயுள்ளது பகத் என்ற தோழருக்கு சந்திப்பு கொடுத்துள்ள எதிர்வினை. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
அசுரன்
Good one Stalin….
//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பகத்,
அந்த கட்சியின் அவல நிலையல்ல அது. அந்த கட்சியை நாம் அவலத்துடன் இருப்பதாக பர்த்து பரிதாப்படும் நிலையில் இல்லை. கொழுப்பெடுத்த பாசிஸ்டு கட்சியாக அது மாறி விட்டது. 🙂
அசுரன்
படு அல்பத்தனமாக வெகு ஜன அரங்கு எண்ணிக்கை எனும் வாதத்தில் போய் ஒளிந்து கொள்கிறார். இது ஓட்டு அரசியல் அவரை எந்த அளவுக்கு எண்ணிக்கை சார்ந்த ஓட்டுப் பொறுக்கியாக மாற்றியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.
மக இகவின் வெகு ஜன அரங்கு செயல்பாடுகளுக்கு லிஸ்ட் கொடுத்தால் அதை எனது கட்சியாக ஏற்றுக் கொள்வேன் என்கிற அளவில்தான் அவரது மார்க்ஸிய அறிவு எண்ணிக்கை சார்ந்து உள்ளது. மக இகவின் தொழிலாளர் அரங்கும், மாணவ்ர் அரங்கும், விவசாயிகள் அரங்கும் CPM யைவிட சிறப்பாகவே உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த லிஸ்ட் என்னிடம் கிடையாது 🙂
மாறாக மக்கள் அரங்கு கணக்குக்கு இன்னொரு அளவுகோல் உள்ளது அது இவர்களின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்லும் போக்கு, தமிழகத்தில் இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பினிய எதிர்ப்பு போராட்டம் எத்தனை நடத்தியுள்ளனர்? மக்களிடம் சென்று மார்க்ஸிய அரசியல் பேசியுள்ளனர்? வெறுமே வோட்டுக்கு பிச்சை எடுப்பதை தவிர்த்து. ரிலையன்ஸை எதிர்த்தும், கோக்கை எதிர்த்தும், சேது பால பிரச்சினையிலும், சிதம்பரம் கோயில் முதல் சமிபத்திய நேபாள கூட்டமைப்பு வரை பல்வேறு பிரச்சினைகளில் அதனை வீச்சாக பொது ஜனங்களிடம் கொண்டு செல்லும் அரசியல் நடைமுறை கொண்டது மக இக.
இவரது கணக்குப்படி விஜயகாந்த்துதான் மிகச் சிறந்த கம்யுனீஸ்டு ஏனேனில் ஆரம்பிக்கும் போதே அவரிடம் CPMக்கு இணையாக வெகு ஜன அரங்கு இருந்தது.
தத்துவத்தில் விளக்கம் கேட்டால் எண்ணிக்கை சார்ந்த விஜயகாந்த் அரசியல் பேசுவது, அதையும் உடைத்துவிட்டால் கொஞ்சா நாள் அமைதியாக இருந்துவிட்டு பிறகு வந்து மீண்டும் இவர் மற்றும் இவர் சார்ந்த கட்சி ஏதோ பெரிய புடலங்காய் கூட்டு போல கதையளப்பது விவாததுக்கு இழுத்து கேள்விகள் கேட்டால் மீண்டும் அதே ப்ல்லவியை பாடுவது….ஸ்ஸ்ஸ்… அப்பா…. நமக்குத்தான் போரடிக்குது 🙂
இதில் இன்னொரு ப்ல்லவி வேறு அதாவது கம்யுனிஸ்டு கட்சியாக புரட்சிக்ர அரசியல் பேசுப்வர்கள் இருந்தால் அவர்கள் வர்க்க எதிரியைத்தானே அம்பலப்படுத்தி பேச் வேண்டும்? ஏன் CPM யை பேசுகிறார்கள்? என்று.
முதல் விசயம் CPMதான் நமது வர்க்க எதிரிகளில் முதலில் நிற்ப்வர்க்ள் என்ற உண்மை. ஹிட்லர் கூட சோசலிஸ்ட் பார்ட்டி என்று பெயர் வைத்திருந்தால் அவனை முதலில் எதிர்க்காமல் வேறு யாரையாவதா எதிர்க்க முடியும்? நந்திகிராமிலும், சிங்கூரிலும் மாமா வேலை பார்ப்பதும், நாடாளுமன்றத்தில் ஏகாதிபத்தியங்களின் காலை நக்கி அரசியல் செய்வதுமான இந்த பாசிஸ்டு கட்சிதான் நமது முதல் எதிரி என்பதிருக்க.
இரண்டாவது விசயம் இன்றைய யுகத்தில் கம்யுனிசத்தின் முதல் எதிரி திரிபுவாதம்தான். அதனால் அதனைத்தான் முதலில் எதிர்க்க வேண்டியுள்ளது. அந்த அம்சத்திலும் இவர்களே முதல் எதிரிகள்(ஒருவேளை இவர்கள் திரிபுவாத போலிகள் என்ற தகுதி படைத்தவர்கள் என்று கருதினால்).
அசுரன்
http://jeyamohan.in/?p=6
////நான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாக பயன்படுத்தியது என்பதையும் எல்லா கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது. அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகள் ஒரு இஸ்லாமிய அரசு எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காணும் என்று வாதிட்டு மதததைப் பரப்புவார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய நாடுகளை சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் இஸ்லாமிய கோட்பாட்டை முழுக்க கடைப்பிடிக்கவில்லை என்பார்கள். அதாவது மண்ணுக்கு மேல் நிற்கும் ஒரு ‘தூய’ தத்துவத்தை சுட்டிக்காட்டும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டும்தான் இது./////
/////எவருடனும் ஓயாமல் விவாதிக்கும் குணம்கொண்ட சோதிப்பிரகாசம் மார்க்ஸிய முன்னோடிகள் பலர் முறைப்படி மார்க்ஸியம் கற்காமல் அதன் மனிதாபிமான அடிப்படையை மட்டுமேஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே மார்க்ஸியத்தை முறைப்படி முழுமையாகப் பயில பதினைந்து வருடங்களை முழுமூச்சாகச் செலவிட்டார். அதில் அவரது மொழித்திறனும் கல்வித்திறனும் வளர்ந்தது.//////
இயற்பியல், வேதியியல் கண்டு பிடிப்புகளை நாம் தூய விஞ்ஞானம் என்று நிராகரித்து விடுவதற்க்கும் மாறாக அவற்றீல் தவறுளளது என்று கண்டுபிடித்து நிராகரிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
முதல் விசயம் வெறுமே அது பிடிக்கவில்லை என்று நிராகரிப்பது அல்லது தனது வசதிக்கேற்ப்ப திரிப்பதற்க்காக நிராகரிப்பது. இரண்டாவது அதை உண்மையில் முழுமையாக அறிந்து கொண்டு அதிலுள்ள தவறுகளை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து நிராகரிப்பது.
மார்க்ஸியத்திற்க்கும் இரண்டாவது விதிமுறை பொருந்தும். மார்க்ஸீய மூலவர்களின் கருத்துக்கள் அனுப்வங்களிலிருந்து மாறுபடுவதற்க்கும் இந்த முறை பொருந்தும்.
மார்க்ஸியத்தை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் சொன்னபடி அப்படியே கடைபிடிக்க வேண்டும் எங்காவது வறட்டு மார்க்ஸியம் பேசியிருந்தால் நாம் பேசியிருந்தால் இவரது ஜெயமோகன் பின்னூட்டத்திற்க்கு ஏதாவது பொருத்தப்பாடு இருந்திருக்கும்.
அல்லது குறைந்த ப்ட்சம் இந்த கட்டுரை சுட்டிக்காட்டியுள்ள அம்சங்கள் எதுவும் இப்போது உண்மையில்லை எனவே கட்டுரை பேசும் மார்க்ஸியம் பொருத்தப்பாடு இழந்துவிட்டது என்று நிரூபித்த பிறகு இந்த பின்னூட்டத்தை சேர்த்து விட்டிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். என்ன செய்ய எப்போதுமே இல்குவான வழிகளில் ஆதாயம் அடையும் முதலாளித்துவ குறுக்கு புத்திக்கு பழகிய அதியமான் இந்த முறையும் அரைகுறையாகவே எதிர்வினை தொடுத்துள்ளார். பரிதாபம்தான்.
ஜெயமோகன் கருத்தை பரிசீலிக்காமல் அதன் உணர்வு தளத்தில் அப்படியே எடுத்துக் கொள்வது எனில் ஏற்கன்வே குறிப்பிட்டது போல இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான விதிகளை கறாராக கடைபிடிப்பதும் கூட மதவாதமே ஆகும். ஆயினும் இங்கு வசதியாக ஒன்றை இவர்கள் அனைவரும் மறைக்கிறார்கள்.
மதவாதம் பேசுபவனை விஞ்ஞான அடிப்படையற்ற விசயத்தை கண்மூடித்தனமாக வழிபடுபவனை விவாதத்தில் தோற்கடித்து விடலாம். இதுவரை அதியமானோ அல்லது வேறு யாரிடமோ இங்கு நேரடியான மார்க்ஸியம் பேசப்படவில்லை. பொது அறிவுக்குட்ப்பட்ட விசயங்களை மார்க்ஸிய ரீதியாக ஆய்வு செய்து வந்தடைந்த மறுக்க் இயலாத உண்மைகளே முன் வைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை மறுத்து வாதிட வக்கில்லாத இவர்கள். சகல்விதமான முகமூடி போட்டு வந்தும் நமது கருத்துக்களை எதிர்க்கும் விஞ்ஞானமில்லாத இவர்கள் இப்பொழுது நம்மையே அஞஞான வழி மதவாதிகள் என்று குற்றம் சொல்வது நகைப்பை வரவழைக்கீறது.
ஒருவேளை ஜெயமோகனின் வரிகளுக்கு பொருத்தப்பாடு இருக்குமெனில் அது உங்களையும் உள்ளிட்ட ஏகாதிபத்திய அடிவருடி கும்பலுக்கும், பார்ப்பன் கும்பலுக்குமே பொருந்தும். ஏனேனில் உங்கள் முன் வைக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் மறுக்க வக்கில்லாமல் ஓடி ஒளிந்தவர்கள் எப்பொழுதுமே நீங்கள்தான்.
அசுரன்
கடுக்கட்டும்… கடுக்கட்டும்…. :-))
வயித்துக் கடுப்போட சேர்ந்து உள்ளே கனெக்சன் மாறிப்போச்சு போல, அதான் வாயாலேயே போறார்.
இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் என்னென்ன கதிக்கு ஆளாகப்போறாரோ நம்ம சந்திப்பு.
🙂
சந்திப்பு அல்லது அவரது தளத்தில் எழுதும் CPM நபர் முதல் முறையாக ஒரு சின்ன முயற்சி செய்துள்ளனர் பாராட்டுக்கள். அதற்கான நமது எதிர்வினை.
//சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை சோசலிசத்திற்கான இந்தியப் பாதை என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்….//
//சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை.//
மேலேயுள்ள ம க இகவின் கருத்திற்கு மறுப்பு எழுதியுள்ள CPM நபர் இவை CPMன் கட்சித்திட்டத்தில் இல்லையென்கிறார். நல்லது, CPMண் கட்சித்திட்டத்தில் நந்திகிராம்கள், சிங்கூர்கள் எல்லாம் உள்ளதா என்று பார்த்துச் சொல்லிவிட்டால் நமது வேலை மிச்சம். ஏனேனில் தோழர்கள் CPM கட்சியின் நடைமுறையைவிட அதன் கட்சித்திட்டத்தையே CPMஆக கருதுகிறார்கள் என்று தெரிகீறது. எப்படி பெயரில் மட்டும் மார்க்ஸிஸ்டு உள்ளதோ அதே போல கட்சிதிட்டத்திலும் மார்க்ஸியத்தை தழுவி ஏதாவது இருப்பதே இவர்களுக்கு போதுமானது. CPM போன்ற கட்சிகள் சமாதான நாடாளுமன்ற பாதையை காட்டுவதாகத்தான் கூறியுள்ளனர்.
//இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை!//
CPMன் பாதையில் சங்கராச்சாரியார் CPMன் நட்பு நந்திகிராம், சிங்கூர் மக்கள் எதிரி. எனில் மார்க்ஸியம் பேசிக் கொண்டு சந்த்ரப்பவாத நடைமுறை கொண்ட இவர்கள்தான் வர்க்கமற்ற அரசியல் செய்கிறார்கள். ஏனேனில் இவர்களின் நடவடிக்கையை தீர்மானிப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. சந்தர்ப்பவாதம் என்பது வர்க்க அரசியல் அல்ல. நாடாளுமன்ற பாதையின் புனிதம் காக்கும் சோம்நாத் சாட்டார்ஜியே இவர்களின் நாடாளுமன்ற பாதைக்கு சாட்சி.
//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்
//
மேலேயுள்ள லெனினின் கூற்றை யாரும் மறுக்கவில்லை. இதுதான் நேபாள மாவொயிஸ்டுகளின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்க உதவுகிறது. சரி இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அந்த சந்திப்பு தளத்தின் CPM நபர் விளக்குவாரா? இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்தை கொண்டுள்ளதா?
உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அரட்டை மடம் என்பதை தாண்டி அதில் ஜனநாயகம் என்ற அம்சத்தில் எதுவுமே இல்லை என்கிற போது அதனை எந்த அர்த்தத்தில் முதலாளித்துவ பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகிறார்கள்? குறைந்த பட்சம் இந்த நேர்மை சீலர்கள் இந்திய ஜனநாயகம் ஒரு போலி என்பதை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட தளங்களில் வந்துள்ள கட்டுரைகளின் ஏதேனும் ஒன்றே ஒன்றை மறுத்து வாதம் செய்தால் கூட இவர்களின் நேர்மை குறித்து நாம் பரிசீலிக்க ஏதுவாகும் அப்படி எதுவுமே செய்யாமல் ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாகிய இந்திய ஜனநாயகம் என்ற பொய்யை தமது வாதத்திற்கு அடிப்படையாக நம்பியிருப்பதே இந்த போலிகளை புரிந்து கொள்ள உதவும்.
//பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். //
தோழிலாளர்களை என்று லெனின் சும்மா பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவதாக சந்திப்பு போன்ற CPM பித்தலாட்டக்காரகள் நம்ப விரும்புகிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கையும் இவர்கள் கொடுத்துவிட்டால் ரொம்ப புன்னியமாகப் போகும். இந்திய ஒரு பின் தங்கிய விவசாய நாடு என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு அப்படியே ரஸ்யாவுடன் பொருத்தும் மொள்ளமாறித்தனமதான் சிறுபிள்ளைத்தனமதான் இங்கு வெளிப்படுகிறது.
மீண்டும் இங்கு ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இயல்புகளுக்கான நடைமுறைகளை இந்தியா போன்ற அரை நிலபிரபுத்துவ சமூகத்திற்க்கு பொருத்தும் பித்தலாட்டத்தை செய்கிறது இந்த் கும்பல்.
//ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.
//
லெனின் குறிப்பிட்டுள்ளதோ மக்களை திரட்டி போராடுவதை மட்டுமே மாறாக ஆயுத போராட்டம் குறித்த பிரச்சாரத்தை நிராகரித்து அவர் எங்கும் எதுவும் கூறியதில்லை. ஆயினும் பித்தலாட்டாக்கார CPM கும்பல் லெனினை திரித்து புரட்டி தமது சந்தரப்ப்வாத கருத்துக்களை நியாயப்படுத்துகீறார்கள். இவர்களை குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்று கிழே பார்க்கலாம்:
“பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது”.-லெனின் (அரசும் புரட்சியும், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது…)”
லெனின் சொல்லாததை சொன்னதாக சொல்வது, லெனின் வார்த்தைகளை பிய்த்து போட்டு தவறான பொருளில் இயந்திரகதியில் வசதிப்படி பொருத்தி பொருள் காண்பது இவை இவர்களின் ரத்தத்தில் ஊறிய்து.
சரி உண்மையில் மக்களை புறக்கணிப்பது யார்? உலகமய அரசியலையும் சரி, மார்க்ஸிய அரசியலையும் சரி மக்களிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிப்பது யார்? மக்களின அடிமைத்தனத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வோட்டு பொறுக்கிகள் யார்? அது வேறு யாருமல்ல சந்திப்பு சார்ந்த CPM பாசிஸ்டு கட்சிதான் அது.
ம க இக நக்சில கும்பல் சாதித்ததில் ஒரு மசிரளவு கூட CPM சாதித்ததில்லை என்பது விந்தையான ஒரு உண்மை.
லெனின் புரட்சிகர புறநிலையிலலாதது பற்றி பேசுகிறாரே அன்றி புரட்சிகர் நடைமுறையை கைகழுவி சந்தர்ப்பவாத நடைமுறைக்கு போகச் சொல்லி எதுவும் சொல்லவில்லை ஆயினும் CPM பாசிஸ்டுகள் அப்படி லெனின் சொன்னதாக பின் குறிப்பாக தமது சொந்த நிலைப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார்கள்.
மீண்டும் ஜனநாயகமான விவாதச் சூழலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் குறித்தே பேசுகீறார் லெனின். ஆயினும் இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் இல்லை என்பதை நாம் எத்தனையோ முறைகள் ஆதாரப் பூர்வமாக பலரிடமும் விவாதம் செய்து நிறுவியுள்ளோம். காமரேடுகளோ அப்படி ஒரு நிருப்பிக்கப்பட்ட உண்மையின் கீழ் விவாதம் செய்ய அஞ்சி அது போன்ற் முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. இதுதான் லெனின் குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனம்.
இதே CPM கும்பல் நேபாளத்தின் மன்னராட்சிக்கு உட்பட்ட போலி ஜனநாயக அரசையும் கூட முதலாளித்துவ பாராளுமன்றம் என்றே தூக்கி வைத்து ஆடினர். ஏனேனில் அங்கு அதனை எதிர்த்து உண்மையான ஜனாநாயக வழிப்பட்ட முதலாளித்துவ அரசை கொண்டு வர போராடிக் கொண்டிருந்தது நேபாள் மாவொயிஸ்டுகள் என்ற கும்பல்லல்லவா? அது CPM மாதிரியோ அல்லது நேபாள காங்கிரஸ் மாதிரியோ அல்லது நேபாள UML மாதிரியோ பெரிய கட்சியில்லையல்லவா?
வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று நிரூபிக்கட்டும் காமரேடுகள். பிறகு உள்ளதெல்லாம் சரி காமெடியாக CPM பித்தலாட்டங்கள்.
முதலாளித்துவ பாராளுமன்றம் என்று சொல்லும் CPM நபர் கட்டுரையின் கடைசி பகுதியில் இப்படி குறிப்பிடுகிறார்:
//பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ – நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து //
அதென்ன பெரு முதலாளிகள்? இது வெறுமே அளவை மட்டுமே குறிக்கிறது இவர்களின் கணக்கில் அப்படியென்றால் இதே பெரு முதலாளிதான் அமெரிக்காவிலும் ஆட்சி செய்கிறான்.
BJP என்ன பெரு முதலாளி கட்சியா?
அதெப்படி நிலபிரபுத்துவ சமூகத்தை முதலாளித்துவம் பேணி பாதுகாக்கும் விந்தை? ஒரு வேளை மார்க்ஸியமே தவறோ?
//மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது.//
மக்கள் ஜனநாயக புரட்சி என்றால் என்னவென்பது ஒரு தனி கேலி கூத்து குறைந்தது அந்த செயல் தந்திரத்தில் காமரேடுகள் முன்னேறியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை., கட்சி திட்டத்தை மட்டும் ரீ பிரிண்டு போட்டுக் கொண்டு நடைமுறையில் மக்கள் ஜனநாயக புரட்சி என்பதற்க்கு எதிர்திசையில் சென்று கொண்டுள்ளனர் சுய முரன்பாட்டு முத்தண்ணாக்கள். இவர்களின் தற்போதைய கூட்டாளிகள் யார் என்று பார்த்தால் இது தெரிய வரும்:
#1) இந்தோனேசிய சலிம் கும்பல், டாடா, அம்பானி.
#2) அமெரிக்க அதிகார வர்க்கம், அரசியல் தலைமைகள்
#3) சங்கராச்சாரி, பில்லி சூனிய கும்பல்
#4) பார்ப்ப்னியமே எமக்கு முதல் என்ற வெளிப்படையாக அறிவித்து விட்டே அமைச்சராக தொடர்வது.
நல்ல நடைமுறை தந்திரம்.
//மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு//
இந்த அம்சத்தில் முற்றிலும் அம்பலப்பட்டு போய் இன்று கம்யுனிஸத்திற்கு கரும்புள்ளீ குத்தும் நடைமுறை தந்திரமாக் இருப்பது CPM னுடையதுதான்.
//இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! //
கடைசியில் மிஞ்சியது இதுதான். இந்த வரையறைப்படி சோனியா காந்தி கூட நல்ல கம்யுனிஸ்டுதான்.
CPMன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல்களுக்கு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசூல் வேட்டைகளுக்கு ஆதாரங்களை அளவிட முடியாத அளவு இருப்பினும் இவையெதையும் சட்டை செய்யாம வாய் சவாடால் அடிக்கிறார் இந்த CPM நபர். ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் தந்திரம்தான் இது. நாம் ஆதாரங்களை வைத்தால் கள்ள மௌனம் சாதித்து ஓடிவிடுவதும் இதற்க்கு முன்பும் நடந்துள்ளது.
தொழிலாளி வர்க்கம் என்று தனது வாதத்தை நடைமுறையை சுருக்கிக் கொள்ளும் CPM இந்தியாவில் பெரும்பான்மை வர்க்கம் எது என்ற ரகசியத்தை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
அசுரன்
Related Articles:
“பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!”
==>http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html
மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத…
http://poar-parai.blogspot.com/2008/03/blog-post_24.html
சி.பி.எம். – இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_11.html
போதையில் நடந்த மாநாடு :
மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_08.html
காவிமயமாகும் சி.பி.எம்.
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/feb/PJ_2008_2_03.html
ஜனநாயகம் என்றால் என்ன? http://tamilcircle.net/unicode/general_unicode/104_general_unicode.html
// தமிழகத்தில் சட்டபூர்வமற்ற புரட்சிகர வேலை செய்வதாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க.//
எங்கே அப்படிச் சொல்கிறது என்று சந்திப்பு சொல்லவாரா?
//உங்களை சட்டப்பூர்வமாக செயலாற்ற அனுமதிக்கும் காலத்தில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு மக்களை சந்தித்து அரசியல் ரீதியாக அவர்களை வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புகளை கட்டியெழுப்பாமல் – சட்டப்பூர்வமற்ற புரட்சிகர வேலையை செய்கிறோம் என்று காட்டுக்குள் ஒளிந்துக் கொல்வதால் //
ம க இக காட்டுக்குள் வேலை செய்கிறதா?
மக்களை அணிதிரட்டி அவர்களிடையே செயல்படுவதைத்தான் ம க இக செய்கிறது. மாறாக பாராளுமன்றத்தில் ஒளிந்து கொண்டு மக்களுக்கு எந்த பதிலும் விளக்கமும் கொடுக்காமல் பிற வோட்டு கட்சிகள் போலவே செயல்படும் CPM, மக்களை ஒவ்வொரு பிரச்சினைக்கும் அனுகும் ம க இகவினரை காட்டுக்குள் அரசியல் செய்வதாக சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.
//
இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது.
//
1947 ஐத்தான் சந்திப்பு இப்படிக் கருதுகிறார் போலும். ஆட்சிமாற்றத்தையே ஏகாதிபத்தியம் ஒழித்துக் கட்டப்பட்டதாக இவர் கருதுகிறாரே.
அப்படி என்றால் இந்தியாவில் 2004இலேயே இந்து மதவெறி பாசிசம் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்றும் உளற வாய்ப்புள்ளது.
அதுதான் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டு விட்டதே.
47இல் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லாலிடம் ஒப்படைத்துப் போனது வெறும் ஆட்சி அதிகாரத்தைத் தான். ஆனால் மதுரை ஹார்வி மில், கிளாக்சோ, பின்னி, கிளைட்டன், ஜி.ஈ.,கிரீவ்ஸ் எனப் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் அப்படியேதான் 47க்குப் பிறகு தொடர்ந்தன. இதன் பேரில் சந்தேகம் இருந்தால் காம்ரேட் பி.ஆர். எழுதிய ‘திராவிட மாயை’ புஸ்தகத்தை சந்திப்பு மறுபடி வாசிக்கட்டும்.
இதற்க்கும் பதில் சொல்லட்டும்:
The Transfer of Power: Real or Formal? — Suniti Kumar Ghosh
http://www.rupe-india.org/43/ghosh.html
தொழில், சுரங்கம், வங்கி எனப் பல கண்ணிகளால் இந்தியப் பொருளாதாரமே சிக்குண்டு அந்நியனுக்கு அடிமையாகிக் கிடப்பதில் இருந்து விடுபடாமலேயே வந்த ஆட்சிமாற்றத்தை சுதந்திரம் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் கருதுவதும், தேர்தலில் தோற்றதாலேயே இந்துத்துவம் ஒழிக்கப்பட்டு விட்டது எனக்கருதுவதும் ஒன்றுதான். பி.ஜே.பிதான் ஆட்சியில் இல்லையே..ஆரெஸெஸ் காரன்கள் சிபிஎம் தொண்டர்களை எப்படி கேரளத்தில் கொல்லமுடிகிறது?
கட்டபொம்மன்
தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி… அவ்வளவுதான்.
//
முனிசிபாலிடி எனத் தெரியவே 25 ஆண்டுகள் ஆனது பெரிய சோகம்தான் என்றாலும் முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா? தமிழ்நாட்டில் இதை அப்படியே பொருத்தினால் 10 அல்லது 12 கவுன்சிலர்களை வென்றெடுப்பதுதான். இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் வெல்வதற்கோ 12 முனிசிபல் சீட் இருக்கிறது என்பதைச் சொல்லவா ஏடறிந்த வரலாற்றில் இருந்தெல்லாம் சமூகவிசாரணை மேற்கொள்ளப்பட்டது?
கேவலமாக இல்லையா?
பன்றித் தொழுவத்தின் தலைமை மேய்ப்பனாகிப் போன பிறகுதான் சோம்நாத் காம்ரேடுக்கு பன்றிக்குட்டிகளின் நாத்தம் தெரிகிறதாம்.. வேசம்தான் போட்டாச்சே.. ஒழுங்குக்கு வராத பன்றிகளை அடித்துத் திருத்தவாவது செய்கிறாரா? பன்றிமேய்ப்பர் பன்றிக்குட்டிகளின் முன் மண்டியிட்டு “பன்றிகளே..நான் ஓடிப் போய் விடலாம் போலிக்கிறது” இதனை விட அபத்தமாக கிரேசிமோகம் கூட வசனம் எழுத முடியாது.
கட்டபொம்மன்
இந்திராவின் எமர்ஜென்சி அடக்குமுறையின் போது இத்தகைய சட்டபூர்வமற்ற வேலைகளையும் – சட்டப்பூர்வமான வேலைகளையும் சி.பி.எம். மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கூட நக்சலிசவாதிகள் தங்களை சீனாவின் ஏகப்பிரதிநிதிகளாகவும் அவர்கள் வழிவந்தவர்களாகவும் மார்தட்டிக் கொண்டனர். அதே போல் சி.பி.ஐ. ரஷ்யப் பிரதிநிதியாக தோள் உயர்த்திக் கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த இரண்டு ஆதரவுகளையும் நிராகரித்து தன்னந்தனியாக களத்தில் நின்று போராடி தற்போது முன்னேறியுள்ளது.
//
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்…எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.
கட்டபொம்மன்
Links to this post
communist party of india (Mummyist)