Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கோபா’ Category

1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.
அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த “அதிவேக ஈனுலைகள்” யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.
ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.
ஆனால் இப்போது ‘123 ஒப்பந்தம்’ என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.
அமெரிக்க அடிமையாக வாழ்வதையே சுகம் என கருதும் உளவாளி மன்மோகன்
இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.
ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.
இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.
அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத ‘நிமிட்ஸ்’ போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..
இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.
“நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது.” என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.
அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?
இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.
“ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து” மன்மோகன் சிங் “உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.
இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.
ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
உடனே ‘தோழர்கள்’ கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.
கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.
கோபா

Related:

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி

அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு

உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!

 

 

1 Comments:

Blogger Arasu Balraj said…
நன்று. சத்தமில்லாமல் ரிலையன்சுக்கு மேற்கு வங்காளத்தின் சில்லறை வணிகத்தை தாரை வார்க்கும் போலி கம்யூனிஸ்டுகள், அணு ஒப்பந்தத்திற்கெதிராக கூப்பாடு போடுவது சரியான வேடிக்கைதான். இதைத்தான் ‘மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்பதோ?
10:06 AM  

Read Full Post »

உழைக்கும் மக்களின் கம்யூனிச சின்னத்தை இழிவு படுத்தும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை?

உழைக்கும் மக்களின் கம்யூனிச சின்னத்தை இழிவு படுத்தும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை?

ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் 123 உள்பட நாட்டையே அடிமையாக்க கூடிய சரத்துகளுடன் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

வெள்ளைக்காரனுங்க ஆரம்பித்த காங்கிரஸ் என்கிற கம்பெனி நாட்டை விற்பதை வெகு விரைவாக செய்துகிட்டு இருக்கார்கள். பா.ஜ.க என்கிற மதவெறி கட்சி இதையே சொல்லி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். எதுக்கு இதே பணியை தொடரந்து செய்யத்தான்.

‘என்ரான்’ என்கிற கொள்ளைக்காரனை கொண்டுவருவதற்கு இந்த இரண்டு பேரும் சேர்ந்தே வேலை செய்ததை திரும்பி பார்த்தால் புரியும். அன்றைக்கு நரசிம்ம ராவ், அலுவாலியா, அடுத்து வந்த வாஜ்பாய், பால்தாக்ரே என்ற அடிவருடி லிஸ்டே என்ரானுக்கு வக்காலத்து வாங்கியது. குறிப்பாக இன்றைக்கு 123 யினால் ஆபத்து இல்லை என கூட்டம் போட்டு திரிகிற கார்த்திக் சிதம்பரம் என்கிற புதிய அடிமையின் அப்பா சிதம்பரம் தான் என்ரானின் வழக்கிலாக இருந்தவர்.

அடுத்து போலி கம்யூனிஸ்டுகள்…கேட்கவே வேண்டாம்…அப்பட்டமாக எதிரியாக மாறி ஆளும் வர்க்கத்துக்கு வேலை செய்கிறார்கள். 2 வருஷமாக ஒப்ப்ந்தத்தை பற்றி வாய்திறக்காமல் இப்ப எதிர்க்கிற மாதிரி நடிச்சுட்டு…அடுத்து கூட்டு ராணுவ நடவடிக்கையினை எதிர்க்க கூட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரகள். இப்படி கம்யூனிஸ்டு பெயரில் ஆளும் வர்க்க அடியாள் வேலை செய்கிறதுக்கு ஒரு கட்சி இந்தியாவில….இப்ப மட்டுமா…போலி சுதந்திர காலத்துல இருந்தே காங்கிரஸ் க்கு வாலாக செயல்பட்டவர்கள் ஆயிற்றே.

கூட்டு குழுவின் முடிவினை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கபில்சிபில் சொல்ல போலிகள் அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்களாகவே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.

123 ஒப்ப்ந்தமா? நிர்பந்தமா? என்று வெளியீடு போட்டு மக்களை குழப்புகிறாரகள். இவர்கள் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் பாருங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்…அணுசக்தி ஒப்பந்தம் என்பது நாட்டை அடிமையாக்க கூடிய பல சரத்து இருக்கு, தற்போது வெறும் 3 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை 7 சதவீதம் என்று 2020 ல் மாற்ற 5 லட்சம் கோடியினை போடப்போறேன் என்பது என அனைத்தையும் விட்டுட்டு பாதுகாப்பு என்கிற ஒரு விஷய்த்தை பார்க்கலாம்.

சுனாமி வந்தப்ப பார்த்தோமானால் 10 நாட்களுக்கு பிணத்தை கூட அப்புறப்படுத்த வக்கில்லாமல் இருந்தது அரசு.

  • படிப்பறிவு அற்ற மக்களுக்கு
  • பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரியாத மக்களுக்கு

இவர்கள் அதிகப்படிய கொண்டு வர இருக்கும் அணுசக்தி உலைகள் என்பது நாளை விபத்துகுள்ளானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே உள்ளது. இது கூட நாங்கள் சொல்லவில்லை, இப்படி நாட்டை மறுகாலனியாக்குவதற்கு தோல் கொடுத்து வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இதழ் ஒன்றில் தானுங்க இந்த செய்தி வந்துள்ளது.

 கோபா

Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Read Full Post »