Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘காங்கிரஸ்’ Category

அமெரிக்காவின் அடியாள் இந்தியா

அமெரிக்காவின் அடியாள் இந்தியா

 பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.

இராணுவ ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ற விதத்தில், இரு நாட்டுப் படைகளும் கூட்டாக இணைந்து, உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும். இரண்டாவதாக, ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திட்டத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும். மூன்றாவதாக, தரை, கடல், வான் வழியாக பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, இரு நாட்டுப் படைகளும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். நான்காவதாக, இரு நாடுகளும் இணைந்து ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்.
அணு சக்தி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சமூகப் பயன்பாட்டுக்காக (மின்சாரம் உற்பத்தி செய்வது) இயக்கப்படும் அணு உலைகள்; இராணுவப் பயன்பாட்டுக்காக (அணுகுண்டு தயாரிப்பது) இயக்கப்படும் அணு உலைகள் என இந்தியா தனது அணு உலைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சமூகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்; புதிதாக அணுகுண்டுச் சோதனைகள் நடத்தக் கூடாது; அணு ஆயுத நாடுகள் உருவாக்கியுள்ள, அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இந்தியா நடக்க வேண்டும்; அணு ஆயுத நாடுகள் போட்டுள்ள ஏவுகணை சோதனை கட்டுப்பாடு குறித்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, இந்தியா நடக்க வேண்டும்.
இந்த இரண்டு ஒப்பந்தங்களையும், சாதாரண வர்ததக ஒப்பந்தம் போல பார்க்க முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைக்கண் பார்வைக்காக, இந்தியா, “”இதுதான் எங்களது அணுக் கொள்ளை”; “”இது தான் எங்களது இராணுவக் கொள்கை” என்று கூறி வந்ததை தடாலடியாக மாற்றிக் கொண்டு விட்டது. சொல்லப் போனால், அமெரிக்காவின் மேலாதிக்க வெறிக்கு இந்தியாவைப் பலிகடா வாக்கும் அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.
நீயும் நானும் ஒன்னு CPMவாயில மண்னு

நீயும் நானும் ஒன்னு CPMவாயில மண்னு

இந்தியாவிற்குப் போலி சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே,””அணி சேராமை எங்களது வெளியுறவுக் கொள்கை” என வாய்ச்சவடால் அடித்து வருவது இந்தியாவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இப்பொழுதோ, இந்த வாய்ச்சவடால்களைக் கூட வெளிப்படையாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அமெரிக்காவின் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர்களில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக அனுப்பும் உத்தரவாதத்தோடு இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி ஆட்சியின் பொழுது, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தோடு, இந்தியா இராணுவ ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொண்டது. (இந்தியாவின் அணிசேராக் கொள்கை அப்பொழுதே பல்லைக் காட்டிவிட்டது தனிக்கதை) அந்த இராணுவ ஒப்பந்தத்தைவிட, தற்பொழுது அமெரிக்க மேலாதிக்க வல்லரசோடு போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் மிகவும் அபாயகரமானது. ஏனென்றால், இந்திய சோவியத் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக பயன்படுத்தும் விதிகள் இருந்ததில்லை.
இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாகப் பயன்படுத்துவது என்ற அம்சம் இந்த ஒப்பந்தத்தில் பச்சையாகச் சொல்லப்படவில்லை; ஆனால், அது, “”இந்திய அமெரிக்க நலன்கள் ஒத்துப் போனால்; “”ஜனநாயகத்தைப் பரப்புவது”; “”பன்னாட்டு நடவடிக்கை” என்ற வார்த்தைகளின் பின்னே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆக்கிரமிப்புப் போரின் மூலமாகவோ அல்லது அதிரடி அரண்மனைப் புரட்சிகளின் மூலமாகவோ தனது கைக்கூலிகளைப் பதவிக்குக் கொண்டு வருவதுதான் “”ஜனநாயகத்தைப் பரப்பும்” அமெரிக்க பாணி. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா நடத்தி வரும் அட்டூழியங்களை அதற்குள்ளாகவா மறந்து விட முடியும்?
அமெரிக்க இராணுவத்துக்கு ஆலோசகராகச் செயல்படும் ஐ.ஏ.டி.ஏ.சி., என்ற அமைப்பு, “”ஆசிய கண்டத்தில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது; தீவிரவாதிகளைத் தேடுவது; பணயக் கைதிகளைக் காப்பாற்றுவது; அமெரிக்காவின் உயர் தொழில் நுட்ப சரக்குகளின் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கடைகோடி இராணுவ நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறமைமிக்க கூட்டாளி கிடைத்தால், அமெரிக்கா தனது வலிமையை முழுமையாக தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்” எனக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா ஒதுக்கும் இந்தக் கடைகோடி வேலைகளைச் செய்யும் எடுபிடியாக இந்திய இராணுவத்தை மாற்றும் நோக்கத்தோடுதான் இந்த இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவும் இப்போது பிணைக்கப்பட்டு விட்டது.
“”மேற்காசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது; கிழக்காசியாவில் அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவை மிரட்டிப் பணிய வைப்பது; மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளத்தை தானே கபளீகரம் செய்வது; இவை எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவைத் துள்ளவிடாமல் கட்டிப் போடுவது” என அமெரிக்கா, ஆசியாவைத் தனது மேலாதிக்கப் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பல திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்கெல்லாம் இந்திய இராணுவம் கூலிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
“”பதற்றம் நிறைந்த மத்திய ஆசியா, தென்கிழக்காசியா, பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் மிகவும் விரைவாகச் சென்றடைவதற்கு, இந்தியாவின் நவீன இராணுவக் கட்டுமானங்கள் பயன்படும்” என்கிறார், அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த அதிகாரி.
“”சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு, அமெரிக்க இராணுவத்திற்கு 2020ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நண்பன் தேவைப்படும். இதற்கு இந்தியாவின் இராணுவ வலிமை பயன்படும் என்பதை நாம் மறுக்க முடியாது” என்கிறது ஐ.ஏ.டி.ஏ.சி. அமைப்பு. 2020இல் இந்தியா, அமெரிக்காவின் கைக்கூலி நாடாக மாறிவிடும் என்பதைத்தான் வல்லரசாகிவிடும் எனப் பூசி மெழுகுகிறார்கள் போலும். தாதாவுக்குக் கீழ் வேலை பார்ப்பவனும் தாதா தானே!
அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பின், அந்நாட்டில் சில வேலைகளை “”காண்டிராக்ட்” எடுக்க இந்தியத் தரகு முதலாளிகள் முயன்றனர். இதற்காக இந்திய இராணுவத்தை ஈராக்குக்கு அனுப்பி வைக்கவும், அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தயாராக இருந்தது. ஆனால், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. அரசால் படையை அனுப்ப முடியாமல் போனது; இதனால் அமெரிக்காவும் வேலைகளை இந்திய நிறுவனங்களுக்குத் தர மறுத்து விட்டது.
தற்பொழுது போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இனி, இது போன்ற எலும்புத் துண்டுகளைப் பரிசாகப் பெறுவதற்கு இந்திய ஆளும் கும்பலுக்குத் தடையேதும் இருக்காது. “”தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு”த் தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு கறித்துண்டு என்றால், அதற்கு அடியாள் வேலை செய்யப் போகும் இந்திய ஆளும் கும்பலுக்கு எலும்புத் துண்டு என்பதுதான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒத்த நலன்.
இந்தியா “”அக்னி”, “”பிருத்வி” ஆகிய ஏவுகணைகளைத் தயாரித்துச் சோதனைச் செய்வதையும்; அவற்றை இராணுவத்தில் சேர்ப்பதையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் அமெரிக்கா, இந்த திட்டத்தை முடமாக்கும் நோக்கத்தோடுதான், “”பேட்ரியாட்” ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்கவும், அமெரிக்காவின் உலகு தழுவிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்திருக்கிறது.
மேலாதிக்க போர் வெறிபிடித்த ரீகனின் ஆசைக் கனவான “”நட்சத்திர போர்” (ஸ்டார் வார்ஸ்) என்ற நாசகாரத் திட்டத்தின் புதிய அவதாரம்தான் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம். உலகு தழுவிய அளவில் மின்னணு போரை நடத்துவதற்கான ஏற்பாட்டில் இணைந்ததன் மூலம், இந்திய ஆளும் கும்பல் “”அமைதி”, “”போர்களற்ற உலகம்” என்ற வார்த்தைகளைப் பேசுவதற்கே அருகதையற்றதாகி விட்டது.
அமெரிக்க அடிமையாக வாழ்வதையே சுகம் என கருதும் உளவாளி மன்மோகன்

அமெரிக்க அடிமையாக வாழ்வதையே சுகம் என கருதும் உளவாளி மன்மோகன்

இந்திய இராணுவத்தையே அமெரிக்காவின் தத்துப் பிள்ளையாக மாற்றும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள இந்த இராணுவ ஒப்பந்தத்தை, எந்தவொரு உயர் இராணுவ அதிகாரியும் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம் இராணுவக் கட்டுப்பாடு அல்ல. அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப் போகும் ஆயுதப் பேரத்தில் கிடைக்கப் போகும் கமிசன். கார்கில் போரில் செத்துப் போன இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதிலேயே கமிசன் அடித்த இராணுவக் கும்பல், பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் நடைபெறவுள்ள ஆயுத பேரத்தை சும்மா விட்டுவிடுமா?

நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக “”போயர்” போரிலும், முதல், இரண்டாம் உலகப் போர்களிலும் இந்திய இராணுவச் சிப்பாய்களைக் கூலிப் படையாகப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்கா பயன்படுத்தும். டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த துணைப் படைத்திட்டம் இந்திய சுதேசி மன்னர்களின் படைகளை, பிரிட்டிஷ் இராணுவத்தின் தொங்கு சதையாக மாற்றியதைப் போல, இந்த இராணுவ ஒப்பந்தம் “சுதந்திர’ இந்தியாவின் இராணுவத்தை அமெரிக்காவின் தொங்கு சதையாக மாற்றுகிறது. காலனிய காலந்தொட்டே இந்திய மக்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்பட்டுள்ள இந்திய இராணுவம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் பிற நாட்டு மக்களையும் இனி விட்டு வைக்காது.
——–
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் என்பதாலேயே , அணு ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள வட கொரியாவையும், ஈரானையும் “”போக்கிரி அரசுகள்” எனத் திட்டித் தீர்க்கும் அமெரிக்க அதிபர் புஷ், இந்தியாவை, “”முன்னேறிய நவீன அணு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள பொறுப்பான நாடு” எனப் பாராட்டுகிறார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதற்குக் கிடைத்த பாராட்டு என்பதற்கு மேல், இதில் அலசி ஆராய்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அமெரிக்க அடிவருடிகளோ, இந்தப் பாராட்டைக் கேட்டவுடனேயே, “”இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டதாக” இதற்குப் பொழிப்புரை எழுதுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள 15 அணு உலைகளில் ஒன்றுகூட சமூகப் பயன்பாட்டுக்காக (மட்டும்) இயக்கப்படவில்லை என்பதே உண்மை. “”இந்தியாவில் உள்ள அணு உலைகளை சமூகப் பயன்பாட்டுக்கானது, இராணுவப் பயன்பாட்டுக்கானது என இரண்டாகப் பிரிப்பது கடினம்” என அணு விஞ்ஞானிகள் கூறியிருப்பதில் இருந்தே இதனைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இராணுவ ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே, அணு சக்தி ஒப்பந்தத்திலும் இந்தியாவைக் கையெழுத்துப் போட வைத்துவிட்டது அமெரிக்கா.
அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட முடியாது; சர்வதேச அணு சக்தி கழகத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட முடியாது என்றெல்லாம் வீறாப்பாக முழங்கிக் கொண்டிருந்த இந்தியா, இன்று, அணுசக்தி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் வகுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஒப்பந்தம் என்றால், அதில் கையெழுத்துப் போடும் இரண்டு தரப்புக்குமே சமமான அளவில் இலாபம் இருக்க வேண்டும். இந்தியா, தனது அணு சக்தி கொள்கையையே மாற்றிக் கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக அதிபர் புஷ், “”அணு தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குத் தர விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் முயற்சி செய்வேன்; அணு ஆயுத வல்லரசு நாடுகளிடம், இந்தியாவை விதிவிலக்காகப் பாவித்து, அணு வேதிப் பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு கோருவேன்” என்ற வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அணு சக்தி விஞ்ஞானிகளோ, “”வாக்குறுதிகள் யாருக்கு வேண்டும்? எங்களுக்கு யுரேனியம் தான் வேண்டும்” என்று முணுமுணுக்கிறார்கள். அடுத்தடுத்து பல அணு உலைகளை இந்தியா அமைத்திருந்தாலும், அவற்றுக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்காவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது. இந்திய அணுசக்தி துறையின் குடுமி, இன்று அமெரிக்காவின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் இதிலிருந்து முடிவுக்கு வர முடியும்.
இந்தியாவிடம் அணுகுண்டுகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவுமான உரிமையை இந்தியாவிடமிருந்து அமெரிக்கா இரகசியமாகப் பெற்றிருக்கக் கூடும். இல்லையென்றால், அணுகுண்டு வெடித்த நாயகன் வாஜ்பாயி, “”இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தனக்கு தேவையான அணு ஆயுதப் பலத்தைத் தீர்மானிக்க முடியாமல் போகும்” என்று ஏன் அச்சப்பட வேண்டும்? அமெரிக்கா, இந்தியாவைத் தனது நம்பகமான கூட்டாளி என்று ஏற்கும்பட்சத்தில், எந்த உரிமையை வேண்டுமானாலும் அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பிக்கும் எனப் பலமுறை நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்த ஒப்பந்தம் அதனை உண்மை என நிரூபித்திருக்கிறது.
நாட்டை அடகு வைக்க உதவியதோடு தம‌து வேலைகளை முடித்துக்கொண்ட‌ போலிக்கம்யூனிஸ்டுகள் பன்றித்தொழுவத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

நாட்டை அடகு வைக்க உதவியதோடு தம‌து வேலைகளை முடித்துக்கொண்ட‌ போலிக்கம்யூனிஸ்டுகள் பன்றித்தொழுவத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

அமெரிக்காவில் கையெழுத்தாகியுள்ள இந்த இரண்டு ஒப்பந்தங்களும் திடீரென்று உருவானவையல்ல் பா.ஜ.க. ஆட்சியின் பொழுது வெளியுறவுத் துறை மந்திரியாகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கும், டால்போட் என்ற அமெரிக்க அதிகாரிக்கும் இடையே இரகசியமாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தான், இப்பொழுது அணு சக்தி ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப பா.ஜ.க. முயற்சி செய்ததை, காங்கிரசு சட்டபூர்வ ஒப்பந்தமாக இந்தியா மீது திணித்து விட்டது. அதாவது பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், கையெழுத்தாவது குறித்து நாடாளுமன்றத்தில் கூடத் தெரிவிக்காமல், மிகவும் இரகசியமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. குறிப்பாக, இராணுவ அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கலந்தாய்வு ஒன்றில் பங்கு பெறுவதற்காக அöமரிக்காவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பினார். இனி, நாடாளுமன்றம் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்கும் ரப்பர் ஸ்டாம்பு சேவையைச் செய்ய வேண்டியது தான் பாக்கி!
முதலாளித்துவ அறிஞர்களால் புனிதமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தையே மதிக்காத காங்கிரசிடம், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை மதித்து நடக்குமாறு போலி கம்யூனிஸ்டுகள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு மாற்று என காங்கிரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளிடம், இந்தச் செக்கு மாட்டுத்தனத்தைத் தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அமெரிக்க அடிமைத்தனத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது, போலி கம்யூனிஸ்டுகளின் தயவோடு என்பதே நடப்பு உண்மை!
ஆகஸ்ட் 05

Read Full Post »

 

 

ர் பக்கம் சிலரை குறிக்க ‘மழுங்கப்பயல்’ என்கிற சொல்லை மக்கள் பயன்படுத்துவார்கள்,அதாவது எவ்வளவு தான் திட்டினாலும் செய்ததையே திரும்பத்திரும்ப‌ செய்து திட்டு வாங்கி வாங்கி அவனுக்கு சுத்தமாக மழுங்கிப்போயிருக்கும்.எந்த ஏச்சும், பேச்சும் அவனுக்கு சுரீர் என்று சுடாது.அதைப்போல தமிழ் நாட்டில் ஒரு மழுங்கப்பய கட்சி இருக்கு,என்னடா இது தமிழ் நாட்டுல அப்படி ஒரே ஒருக்கட்சி தான் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது,ஆமாம் சுத்தமான, நூறு சதவீதம் கலப்படமேயில்லாத‌ மழுங்கப்பய கட்சி தமிழ் நாட்டுல ஒன்னே ஒன்னு தான் இருக்கு. அது தான் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. ஏன் மற்றவனெல்லாம் இல்லையா, எல்லாம் தமிழ் நாட்டில் தானே இருக்கிறாங்க‍ என்று சந்திப்பும் அவரைப்போன்றவர்களும் கேட்க்கக்கூடும்,அவனுங்களும் இருக்கானுங்க ஆனால் அந்த ஓட்டுப்பொறுக்கிக்கெல்லாம் திட்டினால் கொஞ்சமாவது சொரணை வருது, தி.மு.க காரனும்,அ.தி.மு.க காரணும் கொஞ்மாவது கோபப்படுறான், குறைந்தபட்சம் எதையாவது ஒரு பதிலை சொல்றான் ஆனால் எவ்வளவு தான் திட்டினாலும்,கொஞ்சம் கூட சூடும் இல்லாம, சொரணையும் இல்லாம இருக்குற ஒரே ஒட்டுப்பொறுக்கிக்கும்பல் CPM மட்டும் தான்.


க‌ர்நாட‌காவில் ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ளுக்கு மாமா வேலை பார்க்கும் வாய்ப்பு இந்த முறை பா.ஜ.க பயங்கரவாதிகளுக்கு கிடைத்துவிட்டது, உடனே பொங்கியெழுந்துவிட்ட CPM புழுக்கள் பல ஒன்று கூடி இதைப்பற்றி மத்தியக்குழுவில் விவாதித்து, விலைவாசி உயர்வை பயன்படுத்திக்கொண்டு மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

ச‌ரி, பா.ஜ‌.க இப்போது ஆட்சிக்கு வந்தால் என்ன தான் ஆகிவிடும் ?
ஏன் இந்த புழுக்கள் இப்படி பதறிப்போகின்றன என்று கேட்டால். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும், மதவெறியாட்டம் துவங்கிவிடும் எனவே தன் நாங்கள் பா.ஜ.க வை தலை தூக்கவிடாமல் காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்கிறார்கள் இந்த போலி கம்யூனிஸ்டுகள்.
இந்த் யோக்கிய‌ர்க‌ளின் ம‌த‌வாத‌ எதிர்ப்பு எவ்வ‌ள‌வு உண்மையானது தெரியுமா? காங்கிரசு தேசபக்த இயக்கம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு உண்மையானது.

பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இவ‌ர்க‌ள் முன் நிறுத்தும் காங்கிர‌ஸின் நான்காண்டு ஆட்சியில் எந்த‌ ம‌த‌வெறியாட்ட‌மும் ந‌டைபெற‌வில்லையா?
வ‌ரிசையாக‌ ஒவொன்றாக அடுக்குமளவிற்கு நடந்துள்ளது,ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக‌, ரத்தக்களரியான ஒரு மதவெறி வ‌ண்முறையை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு கூடுத‌லாக‌வும்,அதன் உச்சத்தையும் தான்டிவிட்ட ஒரு நிகழ்வு நடந்தது. இந்துமதவெறி பயங்கரவாதிகள் என்றுமே தாம் செய்ததை ஒப்புக்கொண்டதே இல்லை.ஆனால் இந்த ஐக்கிய ‘முற்போக்கு’ கூட்டணியின் ஆட்சியில் ஃபாசிஸம் தன் சொந்த மொழியில் தான் செய்த அணைத்தையும் துனிச்சலோடு பேசியது.

குஜ‌ராத் 2002 இன‌ப்ப‌டுகொலைக‌ளை எப்ப‌டி அர‌ங்கேற்றினோம்,ஒரு குழந்தையை எப்படி பீஸ்,பீஸாக வெட்டியெறிந்தோ‌ம்,க‌வுச‌ர் பானுவின் வ‌யிற்றிலிருந்த சிசுவை எப்படி வெளியே எடுத்து சிதைத்த‌ பின்னர் எரித்தோம்,முசுலிம் பெண்களை எப்படியெல்லாம் கற்பழித்தோம்,இக்ஷான் ஜாஃரியை [காங்கிரசு எம்.பி] எப்படி எரித்துக்கொண்றோம் என்று வ‌ரிசையாக‌ பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌ல் த‌ன‌து வ‌க்கிர‌ வெறியாட்ட‌ங்க‌ளை குரூர‌மாக‌ விவ‌ரித்த‌தை நாம் அனைவ‌ருமே பார்த்தோம்,ப‌டித்தோம்.

மேற்கூறிய‌ அணைத்தும் பா.ஜ.க ஆட்சியிலா ந‌ட‌ந்த‌து?

பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ரவாதிகளின் இந்த‌‌ வ‌க்கிர‌ வாக்குமூல‌ங்க‌ள் அணைத்தும் பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இந்த‌ போலிக‌ள் முன் நிறுத்திய‌ காங்கிர‌சின் ஆட்சியில் தானே நடந்த‌து? இந்தளவிற்கு துனிச்சலாகவும்,திமிராகவும் இந்த‌ ஃபாஸிஸ்டுகள் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்துக்கொண்டிருந்த போது இந்த‌ ப‌ன்றிகள் என்ன‌ பாராளும‌ன்ற‌ கழிவறையிலா தூங்கிக்கொண்டிருந்தார்கள் ? மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் காம்ரேடுகள் கேள்வி கேட்டு பாராளுமன்ற‌ அவையை ஒரு வழி பன்னியிருக்கலாமே, R.S.S,V.H.P போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நடக்கிறதே வேற என்று வழக்கம் போல‌ உங்க மன்மோகன் மாமா தாடியை பிடித்து தொங்கியிருக்கலாமே ஏன் எதையுமே செய்யவில்லை? மதவெறியர்களின் முகத்தை தெகல்கா இவ்வளவு அப்பட்டமாக கிழித்துக்காட்டிய பிறகும் இன்று வரை அந்த பயங்கரவாத கூட்டத்தின் கொடிய மிருகமான மோடியோ,பாபு பஜ்ரங்கியோ கைது செய்யப்படவில்லை, மாறாக மோடி பாதுகாப்பாக உன்னுடைய ஆட்சி நடக்கும் கேரளாவிற்கே வந்து போகிறான், இது போன்ற ஒரு மிருகம் நம் கண் எதிரில் உயிரோடு நடமாடிக்கொண்டிருப்பதே நமக்கு அவமாண‌மாக,வெட்க்கக்கேடாக இருக்கிறது,ஆனால் இந்த

CPM போலிகள், அந்த பயங்கரவாதிகள் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற அவையிலேயே வெட்கமின்றி,மானமின்றி பல்லை இழித்துக்கொண்டு அவர்களுகளோடு கை குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.மதவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த போலிக்கம்யூனிஸ்டுகள் தலையில் வைத்து கூத்தாடும் காங்கிரசு அரசு இவ்வளவு நடந்த பிறகும்,ஒரு இன அழிப்பு பயங்கரவாத நடவடிக்கை அப்பட்டமாக‌ நடந்த பிறகும் இந்த மனிதகுல விரோத‌ ஃபாசிஸ பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர்களுடைய‌ ஒற்றை மயிரை பிடுங்கக்கூடத் துனியவில்லை. நீ முட்டுக்கொடுக்கும் அரசை வைத்துக்கொண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக உன்னால் எதையுமே செய்ய‌ முடியவில்லை என்றால் பிறகு எதை புடுங்குற‌துக்காக‌ காங்கிரசுக்கு புரோக்கர் வேலை பார்த்து தூக்கிப்பிடிச்சிட்ருக்க?
தன்னுடைய கட்சி எம்.பி யையே காப்பாற்ற முடியாத காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் ஆறு வித்தியாசங்களையாவது இந்த போலிக்கம்யூனிஸ்டுகளால் சொல்ல முடியுமா ?
ரொம்பக்கஸ்டம் தான்.

கடைசியாக‌ பார்ப்பன பயங்கரவாத கும்பல் இவ்வாறு சொரணையற்றிருக்கும் போலிகளின் நடு மண்டையிலேயே நச்சென்று ஒரு போடு போட்டுள்ளது,தில்லியிலுள்ள‌ தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது,மத்தியக்கமிட்டி உறுபினர்கள் ஆறு பேருக்கு பலத்த காயம், யெச்சூரியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அதன் பிற‌காவது சொரணை வந்ததா என்று கேட்டால் அது மட்டும் வரவே இல்லை.

இந்த போலிகள் கூறுவதைப்போல அவன் ஆட்சிக்கு வந்தால் தான் ஆபத்து என்பதே ஒரு பொய்.
இந்துமத‌வெறி பயங்கரவாதிகள் வெறியாட்டம் போட பார்ப்பன‌ பா.ஜ.க ஆட்சி தான் இருக்க‌ வேண்டும் என்பதில்லை,காங்கிரசின் ஆட்சியிலேயே அவர்கள் செய்யவேண்டிய அணைத்தையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரிசா தேவாலையம் தகர்க்கப்பட்டது, தெகல்கா அம்பலப்படுத்தல்கள்,ராமர் பாலம்,போலி கம்யூனிஸ்டுகளின் அலுவலகம் தாக்கப்பட்டது,இந்து மதவெறியர்களே வைத்த குண்டுகள் என்று வரிசையாக பார்ப்பன பயங்கரவாதம் விசமாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது.காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் அப்படி என்ன தான் வேறுபாடு,ஒரு வேளை போலிக்கம்யூனிஸ்டுகள் சொல்வதைப்போல வேறுபாடுகள் இருக்குமோ? ஆமாம், காங்கிரசு ராம் என்றால், பா.ஜ.க‌ ர்ர்ராம்
ர்ர்ராம் என்கிறான். பா.ஜ.க வெறியன் இரத்தம் பீரிட குடலை உருவினால்,
காங்கிரசுக்காரன் உருவாமலே கதையை முடித்துவிடுகிறான்.
மொத்தத்தில் பா.ஜ.க வன்முறையின் களத்தில் நிற்கிறான் காங்கிரசு அவ்வாறு நிற்பதில்லை இது தான் CPMன் அவிந்து போன கண்களுக்கு தெரிந்த மாபெரும் வேறுபாடு போலிருக்கிற‌து. மேலும் CPM பேசும் மதச்சார்பின்மை என்பதும் ஆகக்கடைந்தெடுத்த ஒரு பொய் தான். இந்த போலிகளின் ஆட்சி நடக்கும் மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியேற்றப்பட்டது இவர்களின் போலி மதச்சார்பின்மைக்கு சமீபத்திய உதாரணம். மதவாத எதிர்ப்பு என்பதும் கூட வெறுமனே புரியாமல் கத்துவது தான்,பொதுவாக மதவாதம், மதவாதம் என்பதே ஒரு பித்தலாட்டம்.அதை தெளிவாக வரையறுத்து “பார்ப்பனியம்” என்று சொல்வதற்கே துடை நடுங்கும் இந்த கோழைகள் தான் அதை வீழ்த்தப்போகிறார்களாம்.
பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் சாதியை பற்றி ஒரு தெளிவு வேண்டும் ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புரட்சி வந்த பிறகு சாதியெல்லாம் ஒழிந்து விடும் தோழா என்கிற பேச்சை விட்டொழித்துள்ளார்கள் இந்த‌ போலிகள். எனவே இவர்களின் மதவாத எதிர்ப்பு என்பதே ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த ஓட்டுப்பொறுக்கியின் பொய்யை ஒத்தது தான்.

கர்நாடகாவில் பா.ஜ.க பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் என்றால் பா.ஜ.க‌ நம்ம கட்சி,இந்துகளின் கட்சி என்று நம்பியெல்லாம் மக்கள் வாக்களிக்கவில்லை,மாறாக காங்கிரசு கைக்கூலி கும்பல் நடைமுறைப்ப‌டுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைகளின் மீதான வெறுப்பு தான் பா.ஜ.க வை தேர்ந்த்தெடுத்துள்ளது.விலைவாசி உயர்வை பயன்படுத்தி மதவாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று ஊளையிடும் CPM அங்கே ஆட்சியை பிடித்திருக்க வேண்டியது தானே,ஆட்சியை பிடிப்பது கூட இருக்கட்டும்,கேவலம் என்னவென்றால் கர்நாடகாவில் இந்த CPM போலிகள் ஒரே ஒரு சீட்டைக் கூட வெற்றி பெறவில்லை.


பா.ஜ.க கும்பலும் இன்று காங்கிரசு அமல்படுத்திக்கொண்டிருக்கும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகளை தான்
அமல் படுத்திக்கொண்டிருந்தது, கூடவே வக்கிரமாக இந்தியா ஒளிர்கிறது என்றும் சொன்னது அதன் பிறகு நடந்த தேர்தலில் பா.ஜ.க‌ வீட்டிற்கு அனுப்பப்பட்டது.தற்போது கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி வந்துள்ளது காங்கிரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது, இதை வெறுமனே காங்கிரசு என்று மட்டும் சொல்ல முடியாது, காங்கிரசின் கொள்கைகள் என்றால் அவனுக்கு தோள்கொடுத்து தாங்கி நிற்கும் போலிகளுடையதும் தான். எனவே போலிகளும் தான் ம‌க்களால் புற‌ந்தள்ளப்பட்டுள்ளார்கள்.கர்நாடகாவில் காங்கிரசின் நிலமை இதுவென்றால் மே.வங்கத்தின் உள்ளாட்சி தேர்தலில் இந்த‌ CPM போலிகள் படு தோல்வியடைந்துள்ளார்கள்.இந்த அரசியல் நிலைமைகளின் மாற்றம் ஏதோ விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டதைப்போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.எனவே விலைவாசி உயர்வை பயன்படுத்தி தான் பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் சொல்லித்திரிறார்கள்.

ஆனால் உண்மை அது மட்டுமா? அது மட்டுமல்ல மக்களை மரணக்குழிக்குள் தள்ளும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகள் தான் இந்த ஆட்சி மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணம்.விலைவாசி உயர்வு தான் காரணம் என்றால் கூட அது CPMக்கு தெரியாமல் மன்மோகன்சிங் வீட்டுக்கொல்லைப்புற வழியாகவா கொண்டுவரப்பட்டது,
CPM முட்டுக்கொடுக்கும் இந்த‌ ஆட்சியில் விலைவாசி உயர்கிறது என்றால் அதற்கு இந்த போலிக்கம்யூனிஸ்டுகளும் தான் காரணம்.

இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வந்த மே.வங்கத்தில் ஏன் தோழா தோல்வியடைந்தீர்கள்? கர்நாடகாவில் பா.ஜ.க ஏன் வெற்றி பெற்றது? இவை இரண்டும் தொடர்பற்ற இரண்டு விசயங்களா?
நீங்கள் ‘முற்போக்காக’ கூட்டணி வைத்துள்ள மாமா கும்பலோடு சேர்ந்து அமல்படுத்தி வரும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தின் விளைவு இப்படித்தான் இருக்கும். நாட்டைக்காட்டிகொடுக்கிற‌ இந்த அரசியலில் அப்பப்ப நடுவில் வந்து கோமாளி மாதிரி, நாங்க அதை எதிர்க்கிறோம், இதை எதிர்க்கிறோம்,வெளியே போயிருவோம்னு வாய்ச்சவடால் வேற.

மாபெரும் கம்யூனிச தலைவர் யெச்சி ஊரி

மாபெரும் கம்யூனிச தலைவர் யெச்சி ஊரி

அதான் வெத்தலப்பொட்டிக்காரன் மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு கிளம்புடான்னு சொல்லிட்டான்ல்ல அப்புறமும் ஏன் சொரணையே இல்லாம அவன் குண்டிக்கு பின்னாடி போய் நிக்கிற.மானம்னு ஒன்னு இருந்தா மாமா சிதம்பரம் உலகச்சந்தையில இந்தியாவ கூறு ரெண்டு ரூவாய்ன்னு விக்கிறப்பவே வெளியேறியிருக்கனும்.இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துக்கிட்டு,புலி வருது புலி வருதுன்னு ஊர ஏமாத்துர கதையை இன்னும் எத்தனை நாளைக்கு தான் சொல்றன்னு நாங்களும் பார்க்கிறோம்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கான அணைத்து காரணங்களும் இந்த‌ போலிக்க‌ம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகத் தெரியும்,தெரிந்தும் தமது தவறுகளை மூடி வைக்கப்பார்க்கிறார்கள் அதை மறைக்க மேலும் மேலும் பல பொய்களை சொல்லி ஆளும் கும்பலின் அடிவருடிகளாகி மக்களின் துன்பங்களுக்கு காரணமாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு இவர்கள் மறைக்க முடியாது என்பதை நாளுக்கு நாள் அம்பலப்படுத்திவரும் நிலைமகள் பருண்மையாக‌ உணர்த்தினாலும் அது இவர்களுக்கு உரைக்காததால் தான் இவர்களை மழுங்கைகள் என்கிறோம்.

ஒரு பத்து வருடங்களை மனதில் ஓட்டிப்பாருங்கள்.

விவசாயம் செய்ததாலேயே ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போய் விட்டார்கள்.தாக்குப்பிடித்து நிற்கும் விவசாயிகளின் விளை நிலங்கள் அணைத்தும் பிடுங்கப்பட்டு நாளும் நகரங்களுக்கு கூலிகளாக விரட்டப்படுகிறார்கள், நம்முடைய‌டைய‌ 80கோடி உழைக்கும் மக்கள் அன்றாடம் அரை வயிற்றோடு உறங்குகிறார்கள், பல பொதுத்துறை நிறுவணங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளிகள் வீதிகளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்,
40கோடிக்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் நிரந்தர‌ வேலை இல்லாமல் அலைகிறார்கள் ,பல லட்சம் இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில்
[ஐ.டி மேன்மக்கள் அல்ல] மனிதத்தன்மையற்ற முறையில் உழைப்பு உறிஞச‌ப்பட்டு சக்கையாக்கப்படுகிறார்கள், கோடிக்கணக்கான நம்முடைய‌ சகோதரிகள் திருமணம் செய்வதற்காகவே அடிமைகளாக உழைத்து தேய்கிறார்கள்,இந்திய கோதுமை விவசாயிகள் டன் கணக்கில் உற்பத்தி செய்தும் அரசு கொள்முதல் செய்யாத‌தால் போண்டியாகிறார்கள்,கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாக இருந்த‌ சிறுதொழில்களுக்கு தாராளமயம் மொத்தமாக சமாதி கட்டிவிட்டது,லட்சக்கணக்கில் நடைபாதை வண்டிக்கடைகள் நகரங்களிலிருந்து குப்பையைப்போல தூக்கி எறியப்படுகின்றன
ஆனால் இன்னொரு பக்கம் அம்பானி என்கிற அட்டைப்பூச்சி 8000 கோடி ரூபாயில் மும்பையில் ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டிருக்கிறான்!


கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு எந்த நாயால் இந்த நிலைமைகள் உருவானது?
அம்பானி என்கிற பணக்கொழுப்பெடுத்த நாய் 8000கோடிக்கு வீடு கட்டுகிறது என்றால் அது எப்படி வந்த பணம்,யாருடைய பணம்? இதெல்லாம் ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்று துரோகியாகிவிட்ட‌ இந்த CPMக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும்,

இந்த மக்களின் இத்தனை துண்பங்களுக்கும் இந்த போலிக்கம்யூனிஸ்டு துரோகிகள் துணை நின்றிறுக்கிறார்கள்,தற்போதும் மக்களை மரணக்ககுழிக்குள் தள்ளும் ஏகாதிபத்தியக்கைகூலிகளின் மறுகாலனியாக்கக்கொள்கைகளுக்கு துணை நிற்கிறார்கள்.

எதிரிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தலாம், மக்களை உணர்வூட்டி அரசியல் படுத்தலாம்,இது போன்ற நிழல் (virtuals ) பிம்பங்களை
என்ன செய்வது?

சிவப்பு நிறத்தில் ஒளியும் துரோகத்தை குழி தோண்டி தான் புதைக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் இவற்றையெல்லாம் தன்னுடைய விதி என்று மனம் வெந்து வெதும்பிப் புலம்புவார்கள்,ஆனால் புரட்சியாளர்கள் அந்த மக்களை அதே நிலையில் விட்டுவைக்கமாட்டார்கள். அவர்களின் துணை கொண்டே துரோகத்தை புதைப்பார்கள்.

இறுதி மூச்சை இழுத்துக்கொள் துரோகமே
உன் படபடப்பில் அழிந்து போ,
அறண்டு கண்ணீர் விடு,
கண்களையும், காதையும் பொத்திக்கொள்
இனி நீ கானும் காட்சிகள் உவப்பாயிருக்காது
வார்த்தைகளே கொன்று விடும்,
தலைதெறிக்க‌ ஓடு, ஒடிப்போய் விழு உனக்கான குழியில்!

 

3 comments:

ஏகலைவன் said…
மிகவும் அருமையான பதிவு தோழர்.

இருப்பினும், தோழர் அசுரனால் ‘எருமைத்தோலன்’ என்று அழைக்கப்பட்ட இணையக் கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளுக்கு இது நிச்சயமாக உரைக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நாம் ஏற்கெனவே வைத்த பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற இந்த சிபிஎம் துரோகி செல்வப்பெருமாள், “சரி எங்களுக்குப் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்மணி என்ற பெயரில் எழுதிவரும் பார்ப்பனக் கும்பல் கம்யூனிசத்தையும் அதன் ஆசான்களையும் கேவலப்படுத்தி எழுதிவருகிறானே, அவனுக்காவது போயி பதில் சொல்லுடா”ன்னு ஒரு கோரிக்கையை இந்த சந்திப்புவுக்கு நான் வைத்திருந்தேன்.

அதற்கு தமிழ்மணியின் மூலமாகவே நமக்குக் கண்டன பதிலை எழுதவைத்து அதையும் தனது தளத்திலேயே பதிவிட்டான் இந்தத் துரோகி.

கம்யூனிசத்தை இழிவுபடுத்தி அவதூறு செய்யும் பார்ப்பனக் கும்பலுடன் சிறிதும் வெட்கமோ சொரனையோ எதுவுமின்றி, உறவு கொள்ளத் துடிக்கும் இந்த எருமைத்தோலன், நக்சல்பாரிகளை ஆதரித்தோ அல்லது எதிர்க்காமலோ ஏதாவது ஒரு கட்டுரையோ அல்லது செய்தியோ வந்தால் உடனே அலறியடித்துக் கொண்டு வந்து அம்மனமாகக் கூப்பாடு போடுவது வழக்கமாகிவிட்டது.

தோழர் அருள் எழிலன் அவர்கள் எழுதியிருந்த இந்தக்(http://athirai.blogspot.com/2008/05/blog-post.html) கட்டுரைக்குப் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அ. அன்வர் உசேன் என்பவர் தீதீதீதீக்கதிர் என்ற புஸ்வானத்தில் சில அவதூறுகளை அள்ளிவிட்டிருக்கிறான். அதுபோதாதா நம்மக் கோமாளிக்கு உடனே அதை எடுத்து தமது வலைதளத்தில் ‘புரட்சியாளர்களா?, சீர்குலைவாளர்களா?’ என்கிற தலைப்பிட்டு ஒரு கட்டுரையினைப் போட்டிருக்கிறான். அதற்கான சுட்டி (http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html).

“நக்சல்பாரிகள் தான் எமது ஜென்ம விரோதிகள்” என்று பிரகடனம் செய்து கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன மதவெறிக்கும்பல் கூட இந்த அளவுக்கு வரிந்துகட்டிக் கொண்டு அவதூறுகளைப் பரப்புவதில்லை.

சல்வாஜூடுமை ஆதரித்தும் அதற்கெதிராக புரட்சியாளர்களை அவமதித்தும் எழுதும் இந்தத் துரோகக் கும்பலை இனித் தொடர்ந்து திரைகிழித்து எழுத வேண்டும் தோழர்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

சூரியன் said…
தோழரே,
அது போன்ற ஒரு கட்சியில் சந்திப்பைப் போன்ற மழுங்கைகள் மட்டுமே உயிர்வாழ முடியும்.எதிர்கருத்தை நேர்மையாக விவாதிக்க திரானியற்று கைதேர்ந்த‌ உளவாளியை போல வாதங்களை திருப்பி விட்டு சுகம் கானத்தவிக்கும் அந்த பேடியிடம் நாம் நேரத்தை விரையமாக்க வேண்டாமென்று கருதுகிறேன்.

ஏகலைவன் said…
தோழர் சூரியன்,

இணையக் கோமாளி சந்திப்பு குறித்த உமது கருத்து மிகவும் சரியானதே. இருப்பினும் நாம் ஏன் தொடர்ந்து அவருடைய தளத்தில் எழுத நேரிடுகிறது என்றால், நம்முடைய எதிர்வினைகளை அவருடைய தளத்தைப் பார்வையிட வரும் அனைவருக்கும் சென்று சேர்க்கும் நோக்கில்தான்.

தோழர் அசுரன், ஸ்டாலின் மற்றும் நம்முடைய அனைத்துத் தோழர்களும் எளிய விமர்சனகளாக பல்வேறு விசயங்களை அங்கு விவாதித்திருக்கின்றனர். அவை எதுவும் அந்த எருமைத் தோலனுக்கு உரைத்ததாகத் தெரியவில்லை. அந்த விவாதங்களில் பலவற்றை நேர்மையாக பதிப்பிக்கவுமில்லை.

உங்களது முடிவை நான் ஏற்கிறேன் தோழர். சந்திப்பை மேன்மேலும் அம்பலப்படுத்த வேறேதேனும் சிறந்த வழி இருக்கிறதா என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

தோழமையுடன்,
ஏகலைவன்.

Read Full Post »

Older Posts »